Skip to main content

தந்தை வைத்த மின்வேலியில் சிக்கி மகனும், தோழியும் உயிரிழப்பு! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

electric fence set by the father two person incident police investigation

 

கிருஷ்ணகிரி அருகே, தந்தை வைத்த மின்வேலியில் சிக்கி மகனும், அவருடைய தோழியும் பலியாகினர்.

 

கிருஷ்ணகிரி அருகே உள்ள சுபேதார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55). இவருடைய மகன் தசரதன் (வயது 26). இருவரும் விவசாயிகள். தசரதனுக்கு  திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

 

இதே ஊரைச் சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவரை சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துர்க்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சத்யா, கணவரை பிரிந்து தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். ஆரம்பத்தில் தசரதனும், சத்யாவும் நட்பாக பழக தொடங்கினர். இதுவே அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.  

 

இந்நிலையில் ஜூலை 29- ஆம் தேதி, சத்யா தன்னுடைய அண்ணன் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வருவதாகக் கூறி, தனது குழந்தையுடன் சுபேதார்மேடு பகுதிக்கு வந்துள்ளார். 

 

அங்கு தசரதனை சந்தித்துள்ளார். எம்.சி.பள்ளி அருகில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்ற தசரதன், அங்குள்ள இரும்பு கொட்டகையில் சத்யாவுடன் இரவில் தனிமையில் இருந்துள்ளார். சத்யா, தனது குழந்தையை அந்த கொட்டகையில் தொட்டில் கட்டி தூங்க வைத்துள்ளார். 

 

இதற்கிடையே, ஜூலை 30- ஆம் தேதி காலை அந்த வழியாக சிலர் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றபோது அந்த கொட்டகையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு திடுக்கிட்டனர். உடனே அங்கு சென்று பார்த்தபோது, தசரதன் மற்றும் தோழி சத்யா ஆகியோர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை தொட்டிலில் அழுது கொண்டிருந்தது. 

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மகாராஜாகடை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி மற்றும் மகாராஜாகடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இருவரின் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. 

 

இரும்பு கொட்டகையில் இரவு நேரத்தில் வரும் சில மர்ம நபர்கள், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதை தடுப்பதற்காக, இரும்பு கொட்டகையைச் சுற்றிலும் தாமோதரன் மின்வேலியை அமைத்துள்ளார். 

 

இதையறியாத தசரதன் சத்யாவுடன் அங்கு சென்றுள்ளார். குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களின் கைகள், மின் வேலியில் மோதியதால், மின்சாரம் பாய்ந்து இருவரும் இறந்துள்ளனர். 

 

இதையடுத்து தசரதனின் தந்தை தாமோதரனை காவல்துறையினர் கைது செய்தனர். தந்தை வைத்த மின்வேலியில் மகனும், தோழியும் மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.