Skip to main content

‘ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கவேண்டும்’ - அதிகாரியின் உத்தரவால் அதிர்ச்சி

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

education officer ordered each teacher should buy book thousand rupees

 

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருப்பத்தூர் நகரத்தில் புத்தகக் கண்காட்சியும், இலக்கியத் திருவிழாவும்  வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

 

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்களது வகுப்பு மாணவ மாணவிகளை புத்தக விற்பனை கண்காட்சிக்கு அழைத்து வரவேண்டும். ஒவ்வொரு மாணவரும் தலா 100 ரூபாய்க்காவது புத்தகம் வாங்க வைக்க வேண்டும் என மாவட்ட கல்வித்துறை சார்பில் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு ஆசிரியர்கள் கண்டிப்பாக ஆயிரம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கியே ஆகவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 

 

இது குறித்து ஆசிரியர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் அனுப்பிய வாட்ஸாப் செய்தியை நமக்கு அனுப்பினர். அதில், “அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும், உதவி ஆசிரியர்களுக்கும் வணக்கம். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை அனைத்து ஆசிரியர்களும் பார்வையிட்டு, ஒவ்வொருவரும் குறைந்தது ரூபாய் ஆயிரத்திற்கு புத்தகங்களை வாங்கி அதனுடைய ரசீதுகளை வாட்ஸாப் குரூப்பில் அனுப்ப வேண்டும். மாணவர்கள் வாங்கிய புத்தகங்கள் இந்த கணக்கில் சேராது. கண்டிப்பாக ஒவ்வொரு ஆசிரியரும் ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேலும் புத்தகங்களை வாங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக ஆணையிட்டுள்ளார்கள்.

 

நாளை 3:00 மணிக்கு நடைபெறும் இணையவழிக் கூட்டத்தில் நம்முடைய ஒன்றியத்தில் எத்தனை ஆசிரியர்கள் எவ்வளவு தொகைக்கு புத்தகங்களை வாங்கினார்கள் என்ற விவரத்தினை அளிக்கவேண்டி உள்ளதால் ஆசிரியர்கள் வாங்கிய புத்தகங்களுக்கான ரசீதுகளை வாட்ஸாப் குரூப்பில் பதிவிட வேண்டும். 

 

இதன் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். இது ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படியொரு உத்தரவுக்கு காரணமான மாவட்ட ஆட்சித்தலைவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்களைக் கொண்டாடச் செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.