Skip to main content

காப்பர் உருக்காலை போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது பொருளாதார தற்கொலை: ஜக்கி வாசுதேவ்

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
jakki vasudev


காப்பர் உருக்காலை போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என ஜக்கி வாசுதேவ் கவலை தெரிவித்துள்ளார்.

 

 

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஜக்கி வாசுதேவ், காப்பர் உருக்காலை விஷயத்தில் நான் ஒரு நிபுணர் அல்ல. ஆனால் இந்தியா மிகப்பெரிய அளவில் காப்பர் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பது எனக்கு தெரியும்.

நமக்கு தேவையான காப்பரை நாமே உற்பத்தி செய்யாவிட்டால், நாம் சீனாவிடம் இருந்துதான் அதனை வாங்க வேண்டும். சுற்றுச்சூழல் மீறல்கள் என்பது சட்டப்பூர்வமாக வெளிப்படையாக பேசப்பட வேண்டிய விஷயம். அதேசமயம் பெரும் வியாபாரத்தை முடக்குவது என்பது பொருளாதார தற்கொலை என அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

எச்.ராஜா பகிர்ந்த வீடியோ; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
H. Video shared by Raja; Fact finding team explanation!

எச்.ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘பண்ருட்டி - விழுப்புரம் சாலை’ என்று ஒரு வீடியோ மற்றும் இரு புகைப்படங்கள் அடங்கிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் பண்ரூட்டி டூ விழுப்புரம் சாலை மோசமான நிலையில் உள்ளது என்ற தொணியில் அந்தப் பதிவு பரப்பப்பட்டது. 

H. Video shared by Raja; Fact finding team explanation!

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இவை முற்றிலும் பொய்யானத் தகவல். முதலில் உள்ள புகைப்படம் 2018 ஆம் ஆண்டு ஒடிசாவின் புவனேஷ்வர் பகுதியில் எடுக்கப்பட்டது. இரண்டாவதாக உள்ள காணொளி 2020 ஆம் ஆண்டே சீனாவில் எடுக்கப்பட்டது. மூன்றாவதாக உள்ள புகைப்படம் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் மழையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். வதந்திகளைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

எச். ராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Supreme Court order passed on H. raja appeal 

தமிழக பாஜக நிர்வாகியான எச். ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் எச். ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அச்சமயம் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் எச்.ராஜா மனு தாக்கல் செய்திருந்தார். 

Supreme Court order passed on H. raja appeal 

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ‘அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?’என எச். ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு எச். ராஜா தரப்பு வழக்கறிஞர், ‘ஆம்’ எனப் பதிலளித்தார். தொடர்ந்து எச். ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை எச். ராஜா சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார். அத்தோடு எச். ராஜா தரப்பு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக நிர்வாகி எச். ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (14.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது எச். ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், “எச்.ராஜா தெரிவித்த கருத்துகள் எந்த பெண்களையும் அவமானப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்படவில்லை. இந்த பதிவு என்பது எந்த கலவரத்தையும் தூண்டுவதாக இல்லை” எனத் தெரிவித்தார்.

Supreme Court order passed on H. raja appeal 

இதனைப் பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், “பொது வாழ்வில் இருக்கும் ஒருவர் தான் என்ன பேச வேண்டும் என்பதை கவனமாக பேச வேண்டும். இது போன்று பேசுபவர்கள் நிராகரிக்கபட வேண்டும். மேலும் எச். ராஜா தரப்பு வாதத்தை ஏற்க முடியாது” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.