Published on 01/12/2019 | Edited on 01/12/2019
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
![Echo of heavy rain; School holidays tomorrow in Tiruvallur](http://image.nakkheeran.in/cdn/farfuture/lxOaYHqjwUt7tHxCrWnUpp9RwiYfIu5f_j1CRdVdzxk/1575206766/sites/default/files/inline-images/asawasas_0.jpg)
ஏற்கனவே கனமழை காரணமாக கடலூர், புதுவையில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் மழை காரணமாக திருவள்ளூர், தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அந்தந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டள்ளது.