Durga Stalin and Durai Vaiko met

திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சமீபத்தில் திருவெண்காடு கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்றிருந்தார். அதே நேரம், ம.தி.மு.க.வின் தேர்தல் பணிச் செயலாளர் செந்தில் செல்வனின் தாயார் படத்திறப்பு விழாவுக்காக துரை வைகோ மயிலாடுதுறை சென்றிருந்தார்.

Advertisment

திருவெண்காட்டுக்கு துர்கா ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்து துரை வைகோ, அவரை சந்திப்பதற்காக திருவெண்காடு சென்றார். அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்ற துர்கா ஸ்டாலின், வைகோவின் உடல்நலம் குறித்து கனிவாக விசாரித்திருக்கிறார். அப்போது துரை வைகோ, “எங்கள் கலிங்கப்பட்டி வீட்டுக்கு நீங்கள் வரவேண்டும்” என்று துர்கா ஸ்டாலினை அழைத்துள்ளார்.

Advertisment

அதற்கு துர்கா ஸ்டாலின், “நான் ஒருமுறை உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். உங்கள் பாட்டிம்மா செய்யும் அசைவ உணவுகள் அவ்வளவு ருசியாக இருக்கும். சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளைச் சாப்பிடாத நானே, அன்று பாட்டிம்மாவுக்காக சாப்பிட்டேன்” என்று பழைய நினைவைப் பகிர்ந்திருக்கிறார்.