Skip to main content

பேருந்து போக்குவரத்தைத் தொடங்கி வைத்த துரை வைகோ! 

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

Durai Vaiko launches bus service on Ilayarasanandal route

 

ம.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "கடந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின் போது குருவிகுளம் யூனியன் இளையரசனேந்தல் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு உட்பட்ட இலட்சுமி அம்மாள்புரம், புளியங்குளம்,இளையரசநேந்தல் கீழக்காலணி கிராம பொதுமக்கள் சார்பில் மறுமலர்ச்சி திமுக கிளைச் செயலாளர் ராஜாராமன் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது.   

 

கோவில்பட்டியில் இருந்து வரகனூர் வரை செல்லும் பேருந்து புளியங்குளம், இலட்சுமி அம்மாள் புரம், இளையரசநேந்தல்  கீழக்காலணி வழியாக வரகனூர் வரை சென்று கொண்டிருந்த வழித்தடம் எண் (6) அரசுப் பேருந்தை சாலை பராமரிப்பு பணி காரணமாக கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது சாலைப் பராமரிப்பு பணிகள் நிறைவு அடைந்தும் காலை 06.00 மணிக்கு ஒருமுறை மட்டும் இயங்கி வருகின்றது. காலை 06.00  மணி என்பது முழு பயனுள்ளதாக இல்லை. எனவே, அந்த அரசு பேருந்துப் போக்குவரத்தை முன்பு போல தொடர ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தனர். 

 

அதன்படி, ஒன்றிய செயலாளர் ராஜகோபால், கிளைச் செயலாளர் ராஜாராம் மூலம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் தொடர்ந்து பேசி வந்த நிலையில், அதற்கான பேருந்துப் போக்குவரத்து தொடர்ந்து தாமதமாகி வந்தது. கடந்த வாரம் தமிழக அரசு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கரை நேரில் சென்று சந்தித்தேன்.

Durai Vaiko launches bus service on Ilayarasanandal route

குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கி கிராம மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அமைச்சரும் உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்தார்.அதன்படி, இன்று (24/05/2022) காலை மேற்குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தில் மக்கள் கேட்டுக்கொண்ட நேர அடிப்படையில் நாளொன்றுக்கு ஆறு முறையாக அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தேன்.

 

தமிழக அரசுக்கும், மக்களுக்கும் இடையில் பாலமாக இருந்து நாம் முன்னெடுத்த கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் சிலைக்கு துரை வைகோ மரியாதை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் உடன் பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் துரை வைகோ கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு. பூமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ. பாஸ்கர சேதுபதி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.