Skip to main content

போதைப்பொருள் ரெய்டு தீவிரம்... இரண்டே நாளில் 1.33 கோடி ரூபாய் குட்கா பறிமுதல்!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

 

Drug raid intensity; Gudka seizes Rs 1.33 crore in two days

 

சேலத்தில் கடந்த இரண்டு நாட்களில் காவல்துறை தனிப்படையினர் நடத்திய திடீர் சோதனைகள் மூலம் 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

சேலம் மாநகரில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க மாநகரக் காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

 

கடந்த ஜூன் 23ஆம் தேதி செவ்வாய்பேட்டையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பரத்சிங், ஓம்சிங், தீப்சிங், மதன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,000 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், இப்பொருள்களை விற்பனை செய்த ரொக்கம் 33 லட்சம் ரூபாயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைதான நால்வர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. 

 

இதையடுத்து ஜூலை 22ஆம் தேதி செவ்வாய்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சோதனையில் குட்கா பொருட்களை விற்றதாக சுரேஷ்குமார், சேதுராமன், கார்த்தி, அர்ஜூன் சிங் ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் சிறார் குற்றவாளி ஒருவனும் கைது செய்யப்பட்டான். இந்தக் கும்பலிடமிருந்து 312 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

 

இந்நிலையில், ஜூலை 29ஆம் தேதி சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காடு பகுதியில் உள்ள பிஎஸ்எம் லாரி நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு லாரி நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

 

அவருடைய உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய அந்த லாரியை சோதனை செய்தனர். அதில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 7,300 கிலோ எடையுள்ள 248 மூட்டைகள் குட்கா இருப்பது தெரிய வந்தது. அவற்றைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

இது ஒருபுறம் இருக்க, ஜூலை 30ஆம் தேதி அதிகாலையில் சேலம் - உளுந்தூர்பேட்டை சாலையில், கணேஷ் கல்லூரி அருகே ஒரு லாரியிலிருந்து பொலிரோ வாகனத்திற்கு சரக்கு மூட்டைகள் மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதாக வந்த தகவலின்பேரில் அந்த வாகனங்களிலும் காவல்துறையினர் சோதனையிட்டனர். 

 

இந்த சோதனையில் 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2,397 கிலோ எடையுள்ள 72 மூட்டைகள் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் ஆகியோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி, கஞ்சா மற்றும் சட்ட விரோத மதுபானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா எச்சரித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முற்றுகைக்கு ரெடியான நிர்வாகி கைது; தொடரும் கீழ்பவானி வாய்க்கால் நீர் திறப்பு பேச்சுவார்த்தை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Executive arrested for siege; Negotiations on the opening of water by the Kilpawani canal continue

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் 5-வது நினைப்புக்கு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 5வது நினைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியிடாததால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்பவானி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவியை சென்னிமலை போலீசார் அவர் வீட்டில் இருந்து கைது செய்து சென்னிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். இதையடுத்து கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுதந்திர ராசு, வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சென்னிமலையில் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5வது இணைப்புக்கு தண்ணீர் திறப்பது குறித்து வரும் 20 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி விடுவிக்கப்பட்டார்.

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.