Skip to main content

மதுபோதையில் ஓட்டுநர்; கேள்விக்குறியான 12 பள்ளிக் குழந்தைகளின் உயிர்?

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

 driver who drove a school bus under the influence of liquor

 

கோவை மாவட்டம் கோவை புதூர் பகுதியில் தனியார் அகாடமி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை ஒருசில பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்று, அதன்பிறகு பள்ளி முடிந்தவுடன் பெற்றோர்களே தங்களுடைய பிள்ளைகளை அழைத்துச் செல்வார்கள்.

 

இதற்கிடையில், சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளி வாகனங்களில் அனுப்பி வைத்து வருகின்றனர். அதன்படி, காலையில் வீட்டில் இருந்து அழைத்துச் செல்வதும் மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதும் வழக்கம். அந்த வகையில், இந்த அகாடமி பள்ளியில் கோவை புதூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அப்பள்ளியின் காண்ட்ராக்ட் வாகனங்கள் சென்று குழந்தைகளை ஏற்றி வருகிறது.

 

இந்நிலையில், இந்த பள்ளியில் டிரைவராக வேலை செய்து வருபவர் செந்தில். இவர், கடந்த 7ஆம் தேதியன்று கோவை புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வழக்கம்போல் குழந்தைகளைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது, இந்த வாகனம் வடவள்ளியைக் கடந்த நிலையில், குருசாமி நகரில் நடுரோட்டில் திடீரென நின்றுள்ளது. மேலும், இந்த வாகனம் நடுரோட்டில் நின்றதால் அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து, அங்கிருந்த வாகன ஒட்டிகள் பள்ளி வாகனத்தில் வந்து பார்த்தபோது அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் ஸ்டியரிங்கில் தலை வைத்தபடி படுத்துக்கொண்டிருந்தார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அந்த டிரைவருக்கு ஏதாவது விபத்து நடந்திருக்குமோ என அச்சமடைந்தனர். அதன்பிறகு, டிரைவரிடம் சென்றவர்கள் அவரை எழுப்ப முயன்றபோது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. 

 

இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது அந்த ஓட்டுநரின் பெயர் செந்தில் என்பதும் அவர் தலைக்கேறிய மது போதையில் வாகனத்தை ஓட்ட முடியாமல் தத்தளித்துக்கொண்டு ஸ்டியரிங் மேலே உறங்கியது தெரியவந்தது. மேலும், பள்ளி குழந்தைகளை வாகனத்தில் வைத்துக்கொண்டு டிரைவர் செய்த செயல் அங்கிருந்தவர்களைக் கொதிப்படைய வைத்தது.

 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் தங்களுடைய குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, தகவலறிந்த பள்ளி நிர்வாகத்தினர் மாற்று வாகனம் ஏற்பாடு செய்து செந்திலின் வாகனத்தில் இருந்த 12 குழந்தைகளையும் பத்திரமாகப் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். அதே நேரம், மது போதையில் அலட்சியப்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

 

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்திலை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மது போதையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.