Published on 19/06/2019 | Edited on 19/06/2019
.
புதுக்கோட்டையில் பள்ளிக்கூடங்களில் இறைவணக்க கூட்டத்தை திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் வெளியே நடத்த வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு முதன்மை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா அறிவுறுத்தி உள்ளார்.
![prayer](http://image.nakkheeran.in/cdn/farfuture/HaEwQ_UsIpUZZh1Ba6jfZuVuK4MBcaAPeQm5KGzC_nY/1560915086/sites/default/files/inline-images/asdasdsdsdd.jpg)
திங்கட்கிழமை தவிர பிற நாட்களில் இறைவணக்க கூட்டத்தை வகுப்பறையிலேயே நடத்த வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ள அவர் இறைவணக்க கூட்டத்தின் போது வெயிலில் மாணவர்கள் மயங்கி விடுவதாக புகார்கள் வந்ததை அடுத்து தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.