Skip to main content

பிறந்த குழந்தைக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள்..! மெமோ அனுப்பிய மருத்துவக் கல்லூரி முதல்வர்..!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Doctors give death certificate to newborn baby ..! Medical College Chief sends memo ..!

 

தேனி அரசு மருத்துவமனையில் இறந்ததாக கூறப்பட்டு உயிர் பிழைத்த குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று (05.07.2021) பரிதாபமாக இறந்தது.

 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் தாமரைக்குளம் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் பிலவேந்திர ராஜா. இவர், டிரைவர் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி பாத்திமா மேரி. இவர்களுக்கு எட்டு மற்றும் ஐந்து வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பாத்திமா மேரி மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்தார். பிரசவ வலி ஏற்படவே அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை பணியாளர்கள் ஒரு வாளியில் பெண் சிசுவின் உடலை வைத்து பாத்திமா மேரியிடம் கொடுத்துள்ளனர். 

 

இதனால் மனவேதனை அடைந்த தம்பதியினர், தமது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து குழந்தையை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பெரியகுளம் தென்கரை உள்ள கல்லறையில் குழந்தையை அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். அப்போது வாளியைத் திறந்து பார்த்தபோது குழந்தை கண் விழித்து கைகளை அசைத்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

 

உடனடியாக குழந்தையை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். நேற்று காலை 11 மணிமுதல் குழந்தைக்கு வெண்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை திடீரென சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

 

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன், “பாத்திமா மேரிக்கு 6 மாதத்தில் குறைப் பிரசவம் நடந்துள்ளது. 700 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பவத்தன்று பணியில் இருந்த இரண்டு டாக்டர்கள் மற்றும் நான்கு செவிலியர்களுக்கு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

 

இதுகுறித்து பிலவேந்திர ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறும்போது, “பிறந்த குழந்தையின் நாடித்துடிப்பு இதயத்துடிப்பு முறையாக உள்ளதா என்பதைக் கூட பரிசோதனை செய்ய அரசு டாக்டர்களுக்குத் தெரியாதா? எங்களைப்போல வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று தெரியவில்லை. உயிரோடு பிறந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியிலேயே இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அதற்கு சிகிச்சை அளித்து நேற்று மீண்டும் ஒரு இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அரசு டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்கள். அப்படியிருந்தும் குழந்தையின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு உறவினர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.