Skip to main content

"இந்திய நாட்டுக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு டாடி"- உதயநிதி ஸ்டாலின் பேச்சு! 

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

தி.மு.க இளைஞர் அணியில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (13/02/2020) கடலூர் மாவட்டத்தில் தொடங்கியது. 


கடலூர் கிழக்கு மாவட்டம் வடலூரில் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

dmk younth wing udhayanidhi stalin speech at vadalur

பின்பு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்தியா முழுக்க மோடி இருந்தாலும் தமிழகத்தில் எனது டாடி தான். உள்ளாட்சித் தேர்தல் சரியான நேரத்தில், சரியான முறையில் நடைபெற்று இருந்தால் திமுக 90 சதவீத வெற்றியை பெற்றிருக்கும். தமிழகத்தில் நடைபெறும் கேடுகெட்ட அ.தி.மு.க ஆட்சிக்கும், மத்தியில் உள்ள பாஜக ஆட்சிக்கும் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்ட தயாராகி விட்டனர்.
 

தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது. தமிழ்நாட்டில் ஒரு நடிகர் அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என கூறி வருகிறார். இந்த பேச்சு நான் பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே கேட்டு வருகிறேன். அந்தப் பேச்சைப் பற்றியெல்லாம் நமக்கு தேவையில்லை. நாம் நமது பணியினை சரியாக செய்திட வேண்டும்" என்றார். 

dmk younth wing udhayanidhi stalin speech at vadalur

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க இளைஞர் அணியில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி இன்று (13/02/2020) முதன் முதலில் கடலூர் மாவட்டத்தில் துவங்கியுள்ளோம். படிப்படியாக தமிழகம் முழுவதும் வழங்கப்படும். டி.என்.பி.எஸ்.சி முறைகேடு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெறுகிறது. அது சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என கழக தலைவர் கூறியிருக்கிறார். சி.பி.ஐக்கு மாற்றினால்தான் உண்மை குற்றவாளிகள் யார் என தெரியவரும். அதுதான் என்னோட கருத்தும். மாநில அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக காவிரி டெல்டாவை அறிவித்துள்ளது. இது வெற்று அறிவிப்பு. தமிழக அரசு மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது. மக்களுக்கு பாதகமான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என தலைவர் கூறியிருக்கிறார். அதே கருத்துதான் என்னுடைய கருத்தும்" என்றார்.
 

இதேபோல் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நெய்வேலியில் மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் கடலூர் எம்.பி.டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், துரை. கி.சரவணன் எம்.எல்.ஏ, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'தமிழுக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் முதல் எதிர்க்குரல் அவருடையதுதான்'-அமைச்சர் காந்தி பேச்சு

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
'The Chief Minister is the first voice against whoever raises a question against Tamil' - Minister Gandhi speech

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே திமுக கட்சியின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படங்களுக்கு மலர்களை தூவி மரியாதை செய்தார்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி தெரிவிக்கையில், 'பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் தமிழ் மொழிக்காக எவ்வாறு பாடுபட்டர்களோ அதை மிஞ்சும் அளவுக்கு தமிழக முதல்வர் செயலாற்றுவதாகவும் தமிழ் மொழிக்கு எதிராக யார் கேள்வி எழுப்பினாலும் அதனை முதலில் எதிர்த்து குரல் கொடுப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய திட்டங்களை அறிவித்து இந்தியாவிலேயே முன் மாதிரியான முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார்.தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினை மிஞ்சும் அளவிற்கு விளையாட்டு துறை அமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் செயலாற்றி வருகிறார். விளையாட்டுத்துறை என ஒரு துறை இருந்ததே யாருக்கும் தெரியாது. தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆன பிறகு விளையாட்டுத்துறை தற்போது மேலோங்கி வளர்ந்துள்ளது.

திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு நடைபெற்று முடிந்திருக்கிறது' என தெரிவித்தார்.