Skip to main content

மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்த திமுக பெண் சேர்மன்... ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Published on 20/01/2022 | Edited on 21/01/2022

 

DMK woman chairman fainted after taking a pill at the collector's office!

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மன் பதவியைக் கைப்பற்றி விட அதிமுக செய்த முயற்சிகள் பலனளிக்காமல் திமுகவை சேர்ந்த மாலா கைப்பற்றினார். சேர்மன் பதவியை ஏற்றது முதலே ஒரு கூட்டம் கூட நடத்த முடியவில்லை. தன்னுடன் பயணிக்கும் திமுக கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் வரை சேர்மன் மாலா புகார் கொடுத்தார். புகாருக்கும் பிறகும் அதே நிலை நீடித்தது.

 

அதன் பிறகு அமைச்சர் நேரு தலையிட்டு சமாதானம் செய்தும் கூட அதேநிலை தான் நீடித்தது. சில மாதங்கள் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அப்போதைய பெண் அதிகாரி கவுன்சிலர்களிடம் பேசி கூட்டம் நடந்ததாகப் பதிவு செய்தார். மற்றொரு பக்கம் சேர்மன் தன்னிச்சையாகச் செயல்படுகிறார். ஒன்றியத்தில் உள்ள அத்தனை பணிகளையும் அவரே எடுக்கிறார். மற்ற கவுன்சிலர்களுக்கு பணிகள் கொடுப்பதில்லை. கட்சி நிர்வாகிகள் சொன்னாலும் கேட்கவில்லை அதனால் யாரும் ஒத்துழைக்கவில்லை என்கின்றனர்.

 

இந்நிலையில்தான் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் பணிகள் முடங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியரை பார்க்க சேர்மன் மாலா சென்ற நிலையில், ஆட்சியரை சந்திக்கும் முன்பே திடீரென மயங்கி விழ, கூட வந்தவர்கள் தூக்கி தண்ணீர் தெளித்தபோது பல மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக கூறியுள்ளார். உடனே ஒரு காரில் ஏற்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலமுனையாக உள்ளதால் இப்படியான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.