Skip to main content

20 லட்சம் பேருக்கு உணவு வழங்க திமுக தொடங்கிய திட்டம்! ஸ்டாலின் கலந்துரையாடல்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020

 

 DMK plan to provide food for 20 lakhs people

 

திராவிட முன்னேற்ற கழகம் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற, பல மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் ஆலோசகராக இருந்த, குறிப்பாக தற்போது பிரதமராக உள்ள பாஜக மோடியின் தேர்தல் ஆலோசகராக, இருந்த ஐபேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோரை, தங்களது கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வழங்க நியமித்துள்ளது திமுக தலைமை.


அவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் கரோனா நாடு முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் மக்களோடு மக்களாக திமுக நிற்கவேண்டும், உதவ வேண்டும் என ஐபேக் நிறுவனம் ஒரு திட்டத்தினை வகுத்து தந்துள்ளது.

“ஒன்றிணைவோம் வா” என்கிற முழக்கத்தோடு முன்னெடுகப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக, துன்பத்தில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு முயற்சி, ஏப்ரல் 20 ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி உதவி எண்ணை திமுக தலைமை அறிவித்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டால் உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உதவி மையம் (90730 90730) மூலம் உதவி கோரியுள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேருக்கு உதவி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் 29ந்தேதி, “நல்லோர் கூடம் முன்முயற்சியை” என்கிற திட்டத்தை திமுக தலைவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது உதவி வழங்குபவர்களுடன் உதவி கோருபவர்களை இணைப்பதற்கான ஒரு மெய்நிகர் மன்றம், நல்லோர் கூடம், தனிநபர்கள், https://ondrinaivomvaa.in/nallorkoodam/ என்ற தளத்தில் நேரம், வளங்கள் அல்லது தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் வட்டாரத்தில் உதவ பதிவு செய்யலாம். அவர்களுக்கு தேவை உள்ளவர்கள் பற்றிய பட்டியல் தந்து உதவி செய்யவைப்பது.

நல்லோர் கூடம் என்கிற மன்றத்தில் இணைந்த தமிழ்நாடு முழுவதிலும் உள்ள முதல் குழுவுடன், திமுக தலைவர் உரையாடினார். உரையாடலின்போது, தன்னார்வலர்களின் இரக்கமும் உறுதியும் ஒரு நெருக்கடியை நாம் ஒன்றாக சமாளிப்போம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

அதேபோல், ‘ஏழை எளியோருக்கு உணவு’ (Feed the Poor) ‘என்ற திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இது உடனடியாக உணவு தேவைப்படும் மக்களுக்கு, உணவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளூர் திமுக தலைவர்கள், சமையலறைகள் மற்றும் அடிமட்ட உணவளிக்கும் கூட்டாளர்களின் நெட்வொர்க் மூலம் மாநிலத்தின் 25 நகரங்களில் 20 லட்சம் சமைத்த சத்தான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த செயல்பாடுகளை ஆளும்கட்சியும், பிற கட்சிகளும் உற்று நோக்க துவங்கியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.