Skip to main content

தி.மு.க.வின் மீது வீண் பழி போடுகிறார்கள்... முன்னாள் எம்.எல்.ஏ.அப்பாவு பேட்டி!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு இன்று நெல்லை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு பற்றிப் பேட்டியளித்தார்.
 

"ராதாபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியின் ஐயப்பன் என்பவர் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். அவரோடு நான் ஒரு புகைப்படத்திலிருப்பதைப் பார்த்து தற்போதைய எம்.எல்.ஏ.வான தம்பி இன்பத்துரை அதைப் பெரிதாகக் காட்டி அமைச்சர் வரை கொண்டு சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் வைத்துப் பேட்டி கொடுத்ததில் இது தி.மு.க.வின் காலத்திலிருந்தே நடைபெற்ற முறைகேடு அதைத் தான் நாங்கள் களை எடுக்கிறோம் என்று ஒரு தவறான செய்தியைப் பரப்பி தி.மு.க.வின் மீது  வீண் பழி போடுகிறார்கள்.

dmk party leader and ex mla appavu press meet

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்துப் பகுதியையும் நான் அறிவேன். அங்கெல்லாம் சென்றிருக்கிறேன். பல பேருடைய இல்ல விழா, நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்திருக்கிறேன். பல பேர்கள் என்னோடு போட்டோ எடுத்திருக்கிறார்கள். அதில் ஐயப்பன் என்பவர் படமும் எங்கே எடுக்கப்பட்டது என்று எனக்குத் தெரியாது. அவர் கட்சி உறுப்பினரும் கிடையாது அவரை நான் கூட்டிக் கொண்டு பல இடங்களுக்கு அலைந்ததும் கிடையாது. ஒரு சிறு குன்று மணி அளவு கூட, எனக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது. என்னைப் பற்றி எல்லோரும் அறிவார்கள்.
 

1996 முதல் 25 ஆண்டு கால அரசியலில் நான் 15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். தவறைத் தடடிக் கேட்பேனே தவிர, நான் ஒரு போதும் தவறுக்குத் துணை போனதில்லை. இந்த முறை நான் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் கூட, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்று தடை போட்டுள்ளது. 
 

ஆனால் எங்கள் தலைவர், என்னுடைய தம்பி உதய நிதியையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். தி.மு.க. தற்போது ஒரு பீரங்கி என்று அமைச்சரே சொன்னார். அதற்கு நான் நன்றி சொல்லணும். மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ. இவர்களை வைத்துக் கொண்டு சொல்கிறேன். டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுப் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் சுதந்திரமாக விசாரிக்க அனுமதிப்பார்களா? இதை எல்லாம் விடுத்துக் கால்நடைத்துறைக்கு புதிய வடிவம் கொடுக்கிறார்கள். இந்தத் தேர்வே ஊழல்தான்.


தமிழ்நாட்டில் படித்த பல லட்சம் இளைஞர்கள் வேலையைப் பொறுத்து நம்பிக்கை இழந்து விட்டார்கள். இது போன்ற முறைகேடுகளால் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடும். எனவே தேர்வு இனி மேல் நடைபெற வேண்டுமென்றால் தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் மேற்பார்வையில் நடைபெறவேண்டும் மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏ. வை வைத்துக்கொண்டு சொல்லுகிறேன். நான் தி.மு.க.வின் பிரச்சாரப் பீரங்கியாக செயல்படுவேன் என்றார்.
 

பேட்டியின் போது நெல்லை மாநகர தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் மா.செ. ஆவுடையப்பன், நெல்லை எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

இதற்கு முன்னதாக நிருபர்களிடம் பேசிய ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை, "அப்பாவு தன்னுடைய கருத்தை மட்டும் சொல்லியிருக்கலாம் ஆனால் அவர் தனிமனிதத் தாக்குதல் நடத்தியிருக்கிறார் அது தவறு.
 

தவறராகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர் அப்பாவு. டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு புகார் தொடர்பாக அப்பாவுவிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். என வலியுறுத்திய இன்பதுரை எம்.எல்.ஏ. விசாரணை முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

பொன்முடி அமைச்சராவது குறித்து சபாநாயகர் அப்பாவு புதிய தகவல்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Speaker Appavu new information about Ponmudi minister

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் (இன்றைக்குள்) பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார்.

Speaker Appavu new information about Ponmudi minister

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு ஆளுநர் ஆர்.என். ரவி மத்திய உள்துறை அமைச்சகத்துடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை திரும்புகிறார். அமைச்சராக பொன்முடி இன்று பதவியேற்பார் எனக் கூறப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொன்முடி பதவியேற்பது குறித்து பேசுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பொன்முடி அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருவரை அமைச்சராக நியமிக்க பதவி பிரமாணம் எடுப்பது குறித்து ஆளுநரிடம் தெரிவிப்பார். அதன் பிறகு முறைப்படி பதவி பிரமாணம் எடுக்கப்படும்” எனத் தெரித்தார்.