திமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆரணி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம். இவரது மகனுக்கு 2016- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுக தலைமை சீட் வழங்கியிருந்தது. தேர்தலில் செலவு செய்ய பணமில்லையென கரூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம், காசோலைகள், சொத்து பத்திரங்கள் போன்றவற்றை தந்து 5 கோடிக்கு மேல் கடன் வாங்கியிருந்தார்.

DMK PARTY ARANI EX MLA ARRESTED POLICE

Advertisment

Advertisment

அந்த தொகைக்கு சில மாதங்கள் வட்டி செலுத்தி வந்துள்ளார். அதன்பின் வட்டி வழங்கவில்லையாம். இதனால் அந்த தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடனை திருப்பி கேட்டுள்ளனர். இவர் இதோ, அதோ என இழுத்தடித்துள்ளார். அசல் மற்றும் வட்டி என தொகை 8 கோடியாக அது உயர்ந்துள்ளது. இதனால் பணம் தந்த கரூரை சேர்ந்த முக்கிய பிரமுகர் தன் சார்பாக திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பிப்ரவரி 6- ஆம் தேதி விடியற்காலை 01.30 மணியளவில் அவரது வீட்டுக்கு சென்று அழைத்து வந்து திருவண்ணாமலையில் வைத்து விசாரித்து வருகின்றனர்.