Skip to main content

"திமுக இருக்கும் வரை தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முடியாது" - அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

dmk minister i periyasamy talks about hindi imposition

 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு பேசும்போது, "தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவற்றை உலகறியச் செய்தது நமது தாய்மொழியான தமிழ் மொழி தான். இந்த தமிழ் மொழியை நாம் போற்ற வேண்டும்.‌ உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே  பிராந்திய மொழிகளில் வாதாடவும் தீர்ப்பு வழங்கவும் வேண்டும் எனக் கூறியதால் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்பதற்கு இதுவே சான்று.

 

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கிராமப்புறச் சாலைகள் எதுவும் முழுவதுமாக அமையவில்லை. ஆனால் தற்போது தமிழக முதல்வர் இந்த வருடத்தில் பத்தாயிரம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கென தனித் துறையை உருவாக்கியவர் கலைஞர். தமிழுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது அதேபோல் திமுக இருக்கும் வரை தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முடியாது.தமிழுக்குத் தனித் துறையை உருவாக்கி அதற்கு ஒரு அமைச்சரையும் நியமித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர். இந்தியாவை பாஜக 8 வருடங்களாக ஆண்டு வருகிறது ஆனால் விலைவாசி உயர்வைத் தவிர வேறொன்றும் செய்ததில்லை கேஸ், பெட்ரோல் போன்ற அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி கூறினார். ஆனால் தற்போது வரை இந்தியாவில் 12 கோடி பேர் தமது வேலைகளை இழந்து உள்ளனர்.

 

இந்தியாவில் தமிழகத்தில் தான் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தனர். தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் கட்டிட வசதி இல்லாமல் இடியும் தருவாயில் இருப்பதால் தமிழக முதலமைச்சர் இதனை உணர்ந்து நமது கிராம குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக சுமார் 800 கோடி அளவில் தொடக்கப் பள்ளிகளின் கட்டிடங்களைக் கட்ட நிதியை ஒதுக்கி உள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு செய்வதற்காக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு கடந்த திமுக ஆட்சியில் தான் பட்டாவே கொடுத்தோம். அதுபோல் திருச்செந்தூர் கோவிலுக்கும் பட்டா கொடுத்திருக்கிறோம். திண்டுக்கல் மாநகரில் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானோருக்கு பட்டா வழங்கியிருக்கிறோம் அதுபோல் கூடிய விரைவில் காவிரியில் இருந்து கூட்டு குடிநீர் திட்ட மூலம் கூடுதல் தண்ணீரும் திண்டுக்கல் நகருக்கு கொண்டு வர இருக்கிறோம் அது போல் வைகை டேமிலிருந்தும் இருந்தும் திண்டுக்கல் மாநகருக்கு குடிநீர் கொண்டு வர இருப்பதால் திண்டுக்கல் மாநகரில் குடிநீர் பிரச்சனையே இல்லாத அளவுக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரப்படும்" என்று கூறினார்.

 

கூட்டத்துக்கு மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேயர் இளமதி. துணை மேயர் ராஜப்பா. மாவட்ட துணை செயலாளர் நாகராஜ். வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ஜெயின் .ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன். மற்றும் மாநகர பகுதி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.