Skip to main content

கலைஞரின் நெருக்கமான நண்பர், முன்னாள் அமைச்சர்... சிலையை திறந்துவைத்த மு.க. ஸ்டாலின்...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
 

anbil tharmalingam



அன்பில் கிராமத்தில் திருச்சி தொழிலதிபர் வி.கே.என். அவர்களால் அன்பிலார் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை தற்போது சிதிலம் அடைந்து இருந்தாலும் அன்பிலாரின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருவரம்பூர் எம்.எல்.ஏவாக இருக்கும் அன்பிலாரின் பேரன் அன்பில் மகேஷ் சிதலம் அடைந்த சிலையை அகற்றிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அன்பில் தர்மலிங்கத்தின் ஏழரை அடி உயரமுள்ள வெண்கலச் சிலையை தயார் செய்தார்.

 

 

anbil tharmalingam



இந்நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சேடப்பட்டி முத்தையா, எம்.பி திருச்சி சிவா, நடிகர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பியுமான திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிலை திறப்பின்போது கருப்பு சிவப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.

திருச்சி வந்த திமுக தலைவருக்கு டோல்கேட் பகுதியில் மாவட்ட திமுக சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிலை திறப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதைப் போலவே, அன்பில் தர்மலிங்கத்தின் வழியில் செயல்பட்டு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என பேசினார். பேசி முடித்தவுடன் சிலை அருகே சென்று சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.