Skip to main content

"உழவர்களை கண்போல் பாதுகாக்கும் அரசு தான் தி.மு.க. அரசு"- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

"The DMK government is the government that protects the farmers" - Interview with Tamil Nadu Chief Minister MK Stalin!

 

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமின்றி சம்பா, தாளடி செய்திருந்த விவசாய நிலப்பரப்பிலும் மழைநீர் தேங்கி அழுகும் நிலையானது. டெல்டா மாவட்டங்களில் 50,000 ஹெக்டேருக்கும் அதிகமான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருந்து வந்தனர்.

 

"The DMK government is the government that protects the farmers" - Interview with Tamil Nadu Chief Minister MK Stalin!

 

இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

 

இந்தச் சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்யப் போகிறார் என திடீரென அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/11/2021) பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் வழியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தவர். சீர்காழி அடுத்துள்ள கொள்ளிடம் அருகே உள்ள இருக்கூர் கிராமத்திற்கு வந்து, அந்த பகுதியில் மழையில் மூழ்கியிருந்த பயிர்களைப் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அங்கிருந்து தரங்கம்பாடிக்குச் சென்று பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார்.

 

"The DMK government is the government that protects the farmers" - Interview with Tamil Nadu Chief Minister MK Stalin!

 

அங்கிருந்து நாகை மாவட்டம் அடுத்துள்ள கருங்கண்ணி கிராமத்திற்கு வந்தவர், அங்கு மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த விவசாயிகளை சந்தித்துப் பேசினார். இது குறித்து விவசாயி வீரமணி என்பவரிடம் கேட்கும்போது,"வருடா வருடம் மழையால் அழிவதே எங்க நிலமையாகிடுச்சி, ஒவ்வொரு வருடமும் நடவு செய்து பயிரானபிறகே மூழ்கி அழுகும். இந்த வருடம் நடவு செய்த நாளில் இருந்தே மழை பெய்து மூழ்கடிச்சிடுச்சி" என கலங்கியபடி கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து, அருந்தவபுலம் கிராமத்திற்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை நீரில் சேதமடைந்த நெற்பயிர்களின் பாதிப்புகள் குறித்து அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை, அரிசி, உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், கனமழை காரணமாக வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்குப் பிரதம மந்திரி வீடு கட்டும்  திட்டத்தின் கீழ் ஆணையினையும் கையோடு வழங்கினார்.

 

அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தவர். கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவின் ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்துவிட்டு, பின்னர் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். அதோடு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு மனைபட்டா, கூரை வீடு பகுதி சேதம், கால்நடை இறப்பு, உள்ளிட்ட 12 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார்.

 

பின்னர் மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கனமழை காரணமாக, தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை அறிந்திருப்பீர்கள். முதல்வராகிய நான், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

 

நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஆட்சிக்கு வந்த உடனே டெல்டா மாவட்டங்களில் 4,000 கி.மீ. தூர்வாரப்பட்டது. இதனால் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டது. உழவர்களைக் கண்போல் பாதுகாக்கும் அரசு தான் தி.மு.க. அரசு. கடந்த நான்கு மாதங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல் மீண்டும் நடக்கக் கூடாது என்கிற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

 

"The DMK government is the government that protects the farmers" - Interview with Tamil Nadu Chief Minister MK Stalin!

 

சென்னையில் இதுவரை 400 இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தி.மு.க. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகப் பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசு செயல் பட்ட விதத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ்நாடு அரசு நிரந்தர தீர்வை எடுத்துக் கொண்டு வருகிறது. சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு புவியியல் அமைப்பு தொடர்பான ஆய்வு செய்து அறிக்கை தரும்.

 

அதேபோல், டெல்டா மாவட்டங்களில் வெள்ள தடுப்பைத் தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களைப் பொறுத்த வரை தூர்வாரும் பணி நடைபெற்ற காரணத்தால் தான் பெருமளவு சேதம் தடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த வித பதிலும் இதுவரை வரவில்லை." இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.