Skip to main content

நிலக்கோட்டையை கைப்பற்றிய திமுக... புலம்பும் அதிமுக!

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

DMK captures the post of Nilakkottai union leader ...

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு அதிமுக தலைவர் ரெஜினா நாயகம் மற்றும் துணைத்தலைவர் யாகப்பன் ஆகியோர் மீது திமுக ஒன்றிய கவுன்சிலர் லலிதா மணிகண்டன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்.

 

DMK captures the post of Nilakkottai union leader ...

 

அதைத்தொடர்ந்து திண்டுக்கல் கோட்டாட்சியர் காசிசெல்வி தலைமையில் வட்டாட்சியர் தனுஷ்கோடி முன்னிலையில் நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக தரப்பு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பெரும்பான்மையான கவுன்சிலர்களின்  கோரிக்கையை ஏற்று மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு ஒன்றிய கவுன்சிலர்கள் தனித்தனியாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இருதரப்பு கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக திமுக கவுன்சிலர்களும், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அதிமுக கவுன்சிலர்களும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கூறிக்கொண்டு கூட்டத்தை விட்டு  வெளியேறினார்கள்.

 

DMK captures the post of Nilakkottai union leader ...

 

ஆனால் துணைத்தலைவர் யாகப்பனோ, திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துவிட்டது என்றார். அதுபோல் திமுக ஒன்றிய கவுன்சிலர் லலிதாமணிகண்டனோ, பெரும்பான்மையான கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால் திமுக வெற்றி பெற்று யூனியன் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருக்கிறது என்றார். இந்தநிலையில் அங்கு நிலவிய பதட்டமான சூழ்நிலை காரணமாக வாக்குப்பெட்டிகளை அதிகாரிகள் மாவட்ட முகாமுக்கு எடுத்துச் சென்றனர்.

 

DMK captures the post of Nilakkottai union leader ...

 

இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெறலாம் என குற்றம்சாட்டி அதிமுக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி தலைமையில் அக்கட்சியினர் மதுரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீஸாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது. நிலக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எந்த முடிவும் அறிவிக்கப்படாததால் நிலக்கோட்டையில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அதை தொடர்ந்து போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.