Skip to main content

ஒன்றியக் குழு கூட்டத்தில் தி.மு.க கூட்டணி கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

DMK alliance councilors walk out in union committee meeting!

 


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழுக் கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு ஒன்றியக் குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம், சதிஷ்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் குணசுந்தரி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

 

அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பேசிய ராஜபாண்டியன் (தி.மு.க.) "கடந்த இரண்டரை ஆண்டில் பொதுநிதி எவ்வளவு வந்துள்ளது. எந்தெந்த வார்டுகளில் எவ்வளவு பணி நடந்துள்ளது உள்ளிட்ட  விவரங்கள் வேண்டும் என்று கடந்த கூட்டத்திலேயே கேட்டோம். இதுவரை பதில் வரவில்லை" என்றார். கஸ்தூரி செல்வராசு (பா.ம.க) பேசும்போது, "எனது பகுதியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. குடிநீர் பைப் லைன் போடப்பட்டு அந்த வேலை பாதியிலேயே  நிற்கிறது. அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது கேட்டாலும் நிதி வரவில்லை என்று கூறுகிறீர்கள். மக்களிடம் பதில் கூற முடியவில்லை" என்றார். அதற்கு பி.டி.ஒ சதீஷ்குமார், “குடிநீர் பைப் லைன் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடைபெற்ற பணிகள் குறித்து விவரங்கள் விரைவில் தரப்படும்" என்றார்.

 

DMK alliance councilors walk out in union committee meeting!

 

அதனைத் தொடர்ந்து தி.மு.க  கவுன்சிலர்கள் ராஜபாண்டியன், நட்ராஜ் மற்றும் த.வா.க, வி.சி.க உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் 12 பேர், "பொது நிதி இதுவரை  எவ்வளவு வந்துள்ளது. எந்தெந்த உறுப்பினர் பகுதியில் எவ்வளவு வேலை நடந்துள்ளது என விவரம் சென்ற கூட்டத்தில் கேட்டோம். தருகிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இதுவரை பதில் கொடுக்கவில்லை. வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறாததால் பொதுமக்களிடம் எங்களால் பதில் கூறமுடியவில்லை. இதைக் கண்டித்து மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்"  எனக் கூறி வெளிநடப்பு செய்தனர்.


இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 29 உறுப்பினர்களில் அ.தி.மு.க. பா.ம.க உட்பட 17 உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உட்பட வளர்ச்சி பணிக்காக 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.