Skip to main content

தடுப்பூசி செலுத்தியவருக்கு செல்ஃபோன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

District Collector gives cell phone to vaccinated person

 

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் பல விதமான முறையில் பொதுமக்களை ஊக்கப்படுத்திவருகிறார்கள். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்தில் உள்ள வி.புத்தூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவர் பூரணி சிவராஜ் தங்கள் கிராமத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவித்தார்.

 

அப்படி தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் அனைவருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும். மேலும், குலுக்கல் முறையில் அவர்களின் ஒருவரை தேர்வு செய்து அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோன் பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி செலுத்திக்கொண்ட 87 நபர்களில் குலுக்கல் முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தனர். அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோனை முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாம்ராஜ் வழங்கினார்.

 

மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கினார்கள். இதில் திமுக பிரமுகர் சிவராஜ் அண்ணாமலை, ஒன்றிய பொறியாளர்கள் அன்பழகன் நாகராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலா, சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ், செவிலியர் ஆயிஷா, ஊராட்சி செயலர் மூர்த்தி உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்குக் குலுக்கல் முறையில் செல்ஃபோன் வழங்கிய விழிப்புணர்வு தடுப்பூசி முகாம் நிகழ்ச்சி திருக்கோவிலூர் பகுதி மக்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.