Skip to main content

சோழர்களின் அரண்மனை சுவர் கண்டுபிடிப்பு! 

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Discovery of the palace wall of the Cholas!

 

தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன். இவரது மகன் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி வாகை சூடினார். அதனால் அவருக்கு கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்ற சிறப்பு பெயரும் ஏற்பட்டது. இவர் கடல் கடந்து நாடுகளுக்கும் பாய்மரக் கப்பல்களை உருவாக்கி படையெடுத்துச் சென்று அந்த நாடுகளை வென்று வந்ததாக வரலாறுகள் பேசுகின்றன. 


இவரது தந்தை இராஜராஜ சோழன் அழியாத சின்னமாக தஞ்சை பெரிய கோவிலை கட்டினார். ராஜேந்திர சோழன் அதே மாதிரியான பெரும் கோயில் ஒன்றை கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டியுள்ளார். இப்படி வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் அருகிலுள்ள மாளிகை மேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. கடந்த மாதம் 4ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், அகழ்வாராய்ச்சி பணிகளை தொடருமாறு ஆராய்ச்சியாளர்களுக்கு உத்தரவிட்டார். 


அதன்படி அகழ்வாராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த அகழ்வாராய்ச்சியில் தொடர்ந்து பழங்கால செப்பு நாணயங்கள், செப்பு ஆணிகள், இரும்பு ஆணிகள், சீன நாட்டின் பொருட்கள், கண்ணாடி, மணிகள் பொருத்தப்பட்ட சிறு சிறு ஆபரணங்கள், தங்கத்திலான காப்பு ஒன்று என பல வியப்புக்குரிய பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன. 


நேற்று அகழ்வாராய்ச்சியின் போது 25 செ.மீ. உயரம். 12 செ.மீ. அகலம் கொண்ட பெரிய மண் பானை ஒன்று கிடைத்துள்ளது. மேலும் 30 அடுக்கு செங்கற்களால் கட்டப்பட்ட அரண்மனை சுவர் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் 18 செ.மீ. ஆழத்தில் இருந்து கிடைத்துள்ளன. இந்த இடத்தில் ராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்துள்ளது. அது காலப்போக்கில் அரச வம்சம் முடிவுற்ற நிலையில், அரண்மனை சிதைந்து மறைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 


சோழ மன்னர்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த பகுதிகள் அரியலூர் மாவட்டம் என்பதற்கு பல்வேறு கல்வெட்டு சான்றுகள் உள்ளன. ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெரிய கோவில் கட்டப்பட்ட போது அதற்கு சுண்ணாம்பு சாந்து அரைத்துக் கொடுப்பதற்காக கோயிலுக்கு அருகில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த பணிகள் நடந்துள்ளன. அதன் அடையாளமாக அந்தப் பகுதியில் தற்போது சுண்ணாம்புக்கல் என்ற பெயரில் ஒரு சிறு கிராமம் உருவாகியுள்ளது. 


அதேபோன்று அரண்மனை மாளிகை இருந்த பகுதி தற்போது மாளிகைமேடு என அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உட்கோட்டை என்றும், காடுகளைத் திருத்தி படைகளை நிறுத்தப்பட்டதால் படைநிலை, காடுவெட்டி, என்ற கிராம பெயரும் உருவானது. அதேபோன்று சோழ மன்னர்கள் பெயரில் சோழபுரம், சோழன் மாளிகை, பராந்தக சோழனை குறிக்கும் வகையில் ஸ்ரீபுறந்தான், இடைக்கட்டு, ஜெயம்கொண்டம் என அரியலூர் மாவட்டத்தில் பெரும் பகுதி சோழ மன்னர்களின் வரலாற்றுடன் இணைந்துள்ள கிராமப் பெயர்கள் உருவாகியுள்ளன. 


இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கல்வெட்டு ஆய்வு நூல்களை எழுதியுள்ளனர். தற்போது மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி அவைகளை எல்லாம் மேலும் உறுதிப்படுத்தும் வகையில் புதைப் பொருட்கள் கிடைத்து வருகின்றன. தமிழகத்திலுள்ள வரலாற்று ஆய்வாளர்கள் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி செல்லும் அளவிற்கு அங்கே புதையுண்ட சோழர்களின் வரலாறு அகழ்வாராய்ச்சி மூலம் வெளி வந்துள்ளது. அகழ்வாராய்ச்சி தொடரும் நிலையில் இன்னும் பல்வேறு அரிய பொருட்கள் கிடைக்கலாம். அதன்மூலம் இன்னும் பல புதிய வரலாற்று தகவல்கள் அதன் வழியாக வெளிவரும் என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்ளிடம் ஆற்றில் மாயமான மாணவர்கள்; சடலமாக மீட்பு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
3 students missing who bathed in Kollidam river

கொள்ளிடம் ஆற்றில் குளித்த 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது வழியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மாணவர்கள் குளித்துள்ளனர். அச்சமயம் மாணவர்கள் பச்சையப்பன் என்பவர் ஆற்றில் சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து மற்ற மாணவர்கள் பச்சையப்பனை காப்பற்ற முயன்று ஆற்றில் இறங்கியுள்ளனர். இதனால் பச்சையப்பனுடன் 8 மாணவர்களும் ஆற்றில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கவனித்த பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

டெல்லியில் விவசாயி கொலை; அரியலூரில் பதட்டம்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Hariyana farmer passes away tens in Ariyalur

வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசுடன் நடத்திய நான்கு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் நேற்று பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். குறிப்பாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதியான கனாரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 21 வயதான விவசாயி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நேற்றைய தினம் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட, அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி ஆகிய இருவரும், விவசாயி  கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Hariyana farmer passes away tens in Ariyalur

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமானூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கோசலராமன், அரியலூர் தாசில்தார் ஆனந்தவேல் ஆகியோர், இரு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக தரும்படி தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு வழியாக மூன்று மணி நேரம் போராடிய விவசாயிகளை தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கீழே இறக்கினர்.

அதன்பிறகு விவசாயிகள், டெல்லியில் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியான விவசாயிக்கு ஒரு கோடி இழப்பீடு தர வேண்டும். துப்பாக்கிச் சூட்டினை நிறுத்த வேண்டும். கண்ணீர் புகை குண்டு வீசுவதனை உடனடியாக நிறுத்த வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்திட உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி அளித்தபடி குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகளின் பிள்ளைகளின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். அறவழியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரவாதிகளின் போராட்டத்தைப் போன்று கொச்சைப்படுத்துதலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர். 

இந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக கூறினர். பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு முதலுதவி செய்து, பழச்சாறு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டனர். இந்த மொத்த நிகழ்வும் முடியும் வரை அரியலூர் தாசில்தார் உடனிருந்தார். இரு விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.