Skip to main content

பணிவரன்முறையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் விஏஓ... நடவடிக்கை எடுத்த சார் ஆட்சியருக்கு கண்ணீர் மல்க நன்றி!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

Disabled woman VO affected by work specification ... Thanks in tears to the Collector who took action!

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் விளந்திடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியபிரியா(24). இவர் கடந்த 2018-ல்  டிஎன்பிஎஸ்சி மூலம் கிராம நிர்வாக அலுவலராகத் தேர்வு பெற்றார்.  கலந்தாய்வில் இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வாக்கூர் தச்சூர் கிராமத்தில் பணியமர்த்தப்பட்டார். டிஎன்பிஎஸ்சி மூலம் பணிக்கு வந்தவர்களுக்கு ஓராண்டில் பணி வரன்முறை செய்யவேண்டும். இவருடன் பணிக்கு வந்தவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்பட்டது.  "இவர் 75 சதவீத கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி, இவர் எப்படி பணி செய்வார்" என்று கருதி கடந்த 2 வருடத்திற்கு மேலாகியும் பணி வரன்முறை செய்யவில்லை. இதுகுறித்து கடந்த 1 வருடத்திற்கு முன் அப்போது பணியில் இருந்த சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் காவியபிரியா. அப்போது, "தங்களை இந்த பணிக்கு வைத்துக்கொள்ளலாமா? என்று வருவாய்த்துறை தலைமை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபிறகு தான் பணிவரன்முறை செய்ய முடியும்" என்று கூறியுள்ளார். அதன் பிறகு அவர் பணி மாறுதல் பெற்றுச் சென்ற நிலையில், இதுகுறித்து எந்த விளக்கமும் தெரியவில்லை. அதன்பின்னர் கரோனாவால் காலதாமதம் ஏற்பட்டது.

 

இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் கடந்த 2 வாரத்திற்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனிடம் மனு கொடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அவர் உடனடியாக டிஎன்பிஎஸ்சி-க்கும், வருவாய்த்துறை தலைமையகத்துக்கும் பணிவரன்முறை செய்யாமல் இருப்பது குறித்தும் அந்த பெண்ணின் நிலைமையைக் கூறி, விளக்கம் கேட்டுள்ளார். "அவரின் சூழலுக்கு ஏற்ப அலுவலகம் உள்ளிட்ட எந்த பணிக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், உடனடியாக பணிவரன்முறை செய்துகொடுக்கவேண்டும்" என்று பதில் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு பணிவரன்முறை செய்த ஆணையை ஜூலை 26-ந்தேதி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வழங்கப்பட்டது.

 

''கடந்த 2 ஆண்டுகளாக பணிவரன்முறை செய்யாமல் இருந்ததால் எனது சொந்த மாவட்டத்திற்கு இருவழி மார்க்க பணிமாறுதலுக்குச் செல்லமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதுகுறித்து மிகவும் வேதனையுடன் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மனு அளித்தேன். அவர் 10 நாட்களுக்குள் சரியான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஆணையை வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கண்ணீர் மல்க நன்றியைத் தமிழக அரசிற்கும் சார் ஆட்சியருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்  காவியபிரியா.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.