Skip to main content

பொதுமக்களிடம் அடாவடியாக பேசும் திண்டுக்கல் பெண் சப்-இன்ஸ்பெக்டர்!

Published on 30/05/2021 | Edited on 30/05/2021

 

 Dindigul female sub-inspector talking nonsense to the public!

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா நேரத்தில் ஊரடங்கு  வெளியே வரும் பொதுமக்களிடம் மரியாதையாகவும், அன்பாகவும் பேச வேண்டும் என்று போலீசாருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.

 

அதன்படி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கில் அங்கங்கே வெளியே வரும் பொதுமக்களிடம் பாதுகாப்பு பணியில் இருக்கும் பெரும்பாலான போலீசாரும் அன்போடும், மரியாதையோடும் தான் நடத்திக் கொண்டு வருகிறார்கள். திண் டுக்கல் மாவட்டத்திலுள்ள போலீஸ் உயர் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிகளை அவ்வப்போது எஸ்.பி.ரவளி பிரியாவும், டி.ஐ.ஜி முத்துசாமியும் இரவு பகல் பராமல் ஆய்வு செய்தும் வருகிறார்கள்.

 

அதோடு அவர்களுக்கு உணவு, டீ காபியும் கொடுத்து  உற்சாகப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள அஞ்சலி  ரவுண்டானாவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார்கள். அப்பொழுது அவ்வழியாக  டூவீலரில் வந்தவர்களை மடக்கி அனிதா விசாரித்து வருகிறார்.

 

 Dindigul female sub-inspector talking nonsense to the public!

 

அப்பொழுது டூவீலரில் வந்த  முருகன் என்ற நபர் எனது நண்பருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதனால் பேங்கில் போய் பணம் எடுக்கப் போகிறோம். அதற்காகத்தான் அவருடைய துணைவியார் என்னுடன் அனுப்பி வைத்திருக்கிறார். இருவரும் பேங்குக்கு போய் பணம் எடுக்க போகிறோம் என்று கூறியிருக்கிறார். அதை  கேட்ட எஸ்.ஐ. அனிதா, இவ்வளவு டிப்டாப்பாக சுடிதார் போட்டு இருக்கிற அவருக்கு டூவீலர் ஓட்ட தெரியதா? என்று மரியாதை இல்லாமல் பேசியதுடன்  வாய்க்கு வந்தபடி மரியாதை குறைவாக பேசியிருக்கிறார். அதைக்கேட்டு டூவீலரில் வந்த முருகனும் உடன் வந்த நண்பரின் துணைவியாரும் மனம்நொந்து போய்விட்டனர். அதுபோலவே அப்பகுதிகளில் டூவீலர்கள் வரக்கூடிய பொதுமக்களை பாஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேண்டுமென்றே மடக்கி அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டி அடாவடி செயலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. 

 

 Dindigul female sub-inspector talking nonsense to the public!

                        

இதுகுறித்து உடனே டி.ஐ.ஜி.முத்துசாமியை தொடர்பு கொண்டு எஸ்.ஐ.அனிதாவின் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துக் கூறி உடனே எஸ்.பி.யிடம் பேசி உடனே நடவடிக்கை எடுப்பதாக டி.ஐ.ஜி.முத்துசாமி உறுதி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.