Skip to main content

நடராஜர் கோவிலில் ஆளுநருக்கு அவமதிப்பா?

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

G

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழா நடைபெற்றது. இதில் கோவிலின் முக்கிய நிகழ்வான மகா அபிஷேகம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் காலை 5.30 மணி அளவில் அபிஷேகத்தை பார்ப்பதற்கு கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் பாஸ்கர் தீட்சிதர் வரவேற்று மகா அபிஷேகத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது ஆளுநர் அபிஷேகம் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள படியில் ஓரமாக அமர்ந்து உள்ளார். அப்போது அங்கிருந்த கோவில் தீட்சிதர்களின் செயலாளர் உள்ளிட்ட தீட்சிதர்கள் 'இது எங்காத்து பொம்மனாட்டிங்ககூட இங்கு உட்கார்ந்தது இல்லை. நீங்கள் போய் கீழ உட்காருங்க. அங்கு நன்னா தெரியும்'' என கூறியதாகச் சம்பவ இடத்திலிருந்த பாஜகவை சேர்ந்தவர்கள் மற்றும் சில தீட்சிதர்கள் கூறினர்.

 

ஆனால் இதுகுறித்து புதுச்சேரியில் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ''என்னிடம் வந்து கூறினார்கள். நான் கடவுளை பார்ப்பதற்காக வந்தேன்'' எனக் கூறினேன் அவர்கள் திரும்பிசென்று விட்டார்கள். இதனை அவமதிப்பதாக நினைக்கவில்லை கூறியுள்ளார்

 

இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அங்கிருந்த சில தீட்சிதர்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் ஆளுநரிடமே இவர்கள் இப்படி நடந்து கொண்டது அங்கிருந்தவர்களிடம் முக சுளிப்பை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர். மேலும் ஆளுநர் இதனைப் பெரிது படுத்த வேண்டாம் என்று கூட நினைத்து இருக்கலாம், அப்படி பெரிதனால் பாஜகவில் ஆளுநரைதான் நீங்க ஏன் அங்குப் போனீர்கள் என்று குற்றம் சொல்வார்கள். தீட்சிதர்கள் மீது எந்தக் கோபமும் படமாட்டார்கள். அதனால் நடந்த சம்பவத்தை கூட சிதம்பரத்தில் உள்ளவர்களிடமும் செய்தியாளர்களிடமும் கூறவில்லை. அவருடன் வந்தவர்கள் இதனை புதுச்சேரியில் உள்ள செய்தியாளர்களிடம் கூறியதாகக் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து விபரம் அறிய தீட்சிதர்களின் செயலாளர் கார்த்தி என்கிற ஹேமா சபேசன் தீட்சிதரைத் தொடர்பு கொண்டபோது, அவர் தொலைப்பேசியை எடுக்கவில்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

“விதிமுறைகள் மாறி விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tamilisai soundararajan says Rule is changed into a holiday for lok sabha election

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

தமிழகத்தில் நேற்று இறுதி நிலவரப்படி, 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த தேர்தலை விட 3 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “வெள்ளிக்கிழமையில் தேர்தல் நடத்துகிறார்கள். 3 நாள்கள் விடுமுறை வந்ததால் வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. வாக்களிக்க வேண்டும் என்ற விதிமுறையே மாறி அது விடுமுறையாக மாற்றப்பட்டு விடுகிறது. தொடர் விடுமுறையால் வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து விடுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது கவலை அளிக்கிறது. 

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் தேர்தல் நாளை அறிவிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். ஏனென்றால், அன்று தேர்தல் நடத்தினால் அதை விடுமுறையாக எடுத்துக் கொண்டு போகிறார்கள். அதனால், வார நாட்களில் தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கிறேன். அதை பரிசீலித்தால் நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.