Skip to main content

“ராகுல் பேசக்கூடாது என நினைக்கும் சர்வாதிகாரி மோடி” - கே.எஸ். அழகிரி பேட்டி

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

nn

 

நாடாளுமன்ற எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வகையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பது சர்வாதிகாரி மோடியின் கருத்து. ஏன் பேசக்கூடாது என்று கருதுகிறார் என்றால் ராகுல் காந்தி பேசினால் அதானி விஷயத்தை பேசுகிறார். பொதுவெளியில் அதானி விஷயத்தை பேசினால் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசினால் அரசாங்கம் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அரசாங்கம் பதில் சொன்னால் அந்த பதில் சட்டப்பூர்வமான பதிலாக இருக்க வேண்டும். அதில் அவர்கள் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். எனவே நாடாளுமன்றத்தில் அதைப்போன்ற இக்கட்டான சூழல் வரக்கூடாது என்பதற்காக தன்னுடைய நண்பர் அதானியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மோடி ராகுலை பேசவிடாமல் தடுக்கிறார்.

 

ராகுல் மிகவும் எளிமையான கேள்விகளை கேட்டார். இந்தியாவில் எந்தத் தொழிலதிபருக்கும் கிடைக்காத சலுகைகள் அதானிக்கு மட்டும் எப்படி கிடைக்கின்றன; நீங்கள் வெளிநாடு செல்கின்ற போதெல்லாம் அதானி கூட வருகிறார் என்ன காரணம்; நீங்கள் சென்று வந்த உடனேயே அந்த நாடுகளுக்கு அவர் சென்று வருகிறார் அதற்கான காரணம் என்ன; நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும் ஏராளமான முதலீடுகளோடு, தொழில் ஒப்பந்தங்களோடு வருகிறீர்கள் ஆனால் அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் அதானிக்குத்தான் செல்கின்றனவே ஒழிய மற்ற நிறுவனங்களுக்கு ஏன் செல்லவில்லை என்பதுதான் ராகுலின் எளிய கேள்வி'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.