Skip to main content

"அரசியலில் யாரால் வளர்ந்தார்களோ அவர்களையே காட்டி கொடுக்கிறார்கள்" - திவாகரன் மறைமுக சாடல்!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

மறைந்த தமிழக முன்னால்  முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன், அவரது கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

 

Dhivakaran about Shashikala



அப்போது உள்ளாட்சி தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, " உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக, ஊராட்சி , நகராட்சி, பேரூராட்சி , மாநகராட்சி  உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் சேர்த்து நடத்த வேண்டும். இல்லை என்றால் தேர்தலில் பல சாகசங்கள் நடத்துவிடும் என்று தெரிவித்தார்.

சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுக, அமமுக , அண்ணா திராவிடர் கழகம் உள்ளிட்ட மூன்று இயக்கங்களும்  இணையுமா என்கிற கேள்விக்கு " தொண்டர்களின் மனநிலை அப்படிதான்  உள்ளது. ஆனால் சசிகலா ஜனவரி மாதத்தில் வெளியே வருவாரா அவரை சேர்ந்தவர்கள் வரவிடுவார்களா,என்ற கேள்விக்குறிதான் தற்போது உள்ளது.

 

Dhivakaran about Shashikala



அவரை சிறையிலேயே வைத்துக்கொண்டு இங்கு அரசியல் நடத்துவதற்குத்தான்  அவரை நம்பியுள்ளவர்கள்  விரும்புகிறார்கள். அது எல்லாம் தற்போது அவர்களிடம் இருந்து வெளியில் வந்தவர்கள் மூலமே வெளியே வருகிறது. கிட்டதட்ட அனைவரும் வெளியே போய்விட்டார்கள். 

அவர்களின் சதியை கண்டு புரிந்து கொண்டு, விரக்தியில் முதலில் வெளியே வந்தது நான் தான். முதலில் அரசியலில் ஓர் நேர்மை இருக்க வேண்டும். பண பலத்தை வைத்து கொண்டு ருசி பார்க்க கூடாது. அரசியலில் யாரால் வளர்ந்தார்களோ அவர்களையே  காட்டி கொடுக்கிறார்கள்.  அவர்களையே கீழே போட்டு மிதிக்கிறார்கள்" என்று மறைமுகமாக சாடினார். 

பின்னர் நிர்மலா சீதாராமன் 5,7373 மெட்ரிக்டன் வெங்காயம் கை இருப்பு இருப்பதாக கூறியிருக்கிறதே என்கிற கேள்விக்கு. " வெங்காயம் கை இருப்பு இருந்தால் ஏன் விலை உயர்கிறது. அதை வெளிக்கொண்டு வரவேண்டியது தானே. உயர்ந்த ஜாதியினர் வெங்காயம்  பூண்டு சாப்பிட மாட்டார்கள். அதனால் அவருக்கு இதைபற்றி கவலையில்லை " என தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.