Skip to main content

பெற்றோருக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி மரணம்

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

dharmapuri lovers incident

 

தர்மபுரி மாவட்டம் ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் (18) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)  தர்மபுரியில் உள்ள அரசு ஐடிஐ தொழில் பயிற்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கிஷோரும் ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள கொல்லப்பட்டியைச் சேர்ந்த அபர்ணாவும் (19)  (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)  காதலித்து வந்தனர். அபர்ணா, பாலக்கோட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் கல்லூரிக்கு தினமும் ஒரே பேருந்தில் சென்று வந்தபோது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, பின்பு காதல் மலர்ந்துள்ளது.

மகளின் காதல் விவகாரத்தை அறிந்த பெற்றோர், அவருக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனால் அபர்ணா தனது காதலன் கிஷோரை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். அதன்படி இருவரும் கடந்த 7 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி பாலக்கோட்டில் உள்ள முருகன் கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் கிஷோரும், அபர்ணாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து தாங்கள் திருமணம் செய்து கொண்டதை மறைத்து  வழக்கம்போல இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

 

இதனிடையே அபர்ணா காதல் திருமணம் செய்து கொண்டதை அறியாத அவருடைய பெற்றோர், ஏற்கனவே அவருக்கு பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளையுடன் திருமணம் செய்து வைக்க தீவிர ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர்.  ஆனால் காதல் திருமணம் செய்து கொண்டதை பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவித்து வந்த அபர்ணா தனது காதலன் கிஷோரிடம் சொல்லி அழுதுள்ளார். அதன் பிறகு இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

 

எந்த முருகன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனரோ அதே  பாலக்கோடு முருகன் கோவிலுக்கு சென்று கடந்த 10 ஆம் தேதி இருவரும் எலி மருந்தை தண்ணீரில் கலக்கி குடித்துள்ளனர். இதனிடையே இருவரும் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்ற தகவலை அவரவர் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரின் பெற்றோர்களும், உறவினர்களும் பாலக்கோடு முருகன் கோவிலுக்கு சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கிஷோரையும், அபர்ணாவையும்  மீட்டு  உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அபர்ணா உயிரிழந்தார்.

 

இவரைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிஷோரும் கடந்த 10 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அதன் பிறகு இருவரின் சடலங்களும் உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.