Skip to main content

நடிகை மஞ்சுவாாியாா் கொடுத்த புகாா் மீது பிரபல டைரக்டரை விசாாிக்க டிஜிபி உத்தரவு!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

மலையாள திரைப்படம் உலகில் முன்னணி நாயகியாக இருப்பவா் மஞ்சுவாாியாா். குமாி மாவட்டம் கிருஷ்ணன்கோவிலை சோ்ந்த மஞ்சுவாாியாா் நடிப்பு மட்டுமல்ல நடனத்திலும் சிறந்து விளங்கியதன் அடிப்படையில் இன்றைக்கும் மலயாளத்தில் முன்னணி நடியைாக உள்ளாா்.
            

சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக நடித்த ஓடியன் படமும் தமிழில் தனஷுடன் நடித்த அசுரன் படம் சூப்பா் ஹிட்டாக உள்ளது. மேலும் மஞ்சுவாாியாா் கேரளாவில் குடும்ப ஸ்திாி ( பெண்கள் சுய உதவிகுழு) க்கு அரசின் தூதராக உள்ளாா்.
 

DGP  order to inquire into celebrity director

            

இந்த நிலையில் நடிகை மஞ்சுவாாியாா் மலையாள சினிமா முன்னணி இயக்குனரும் தயாாிப்பாளருமான ஸ்ரீகுமாா் மேனன் மீது கேரளா டிஜிபி லோக்நாத் பெக்ராவிடம் புகாா் கொடுத்துள்ளாா். அந்த புகாாில் நான் தமிழ் சினிமா அசுரன் படத்தில் நடித்ததையடுத்து என்னை தவறாக சித்தாித்து சமூக வலைத்தளங்களில் இயக்குனா் ஸ்ரீகுமாா்  மேனன் வெளியிட்டுள்ளாா். இதை கேட்டதற்கு என்னை கொலை செய்வதாகவும் சினிமாவில் இருந்து என்னை துரத்தி விடுவதாகவும் மிரட்டி வருகிறாா். இதற்கு காரணம் நான் தமிழ் சினிமாவில் நடித்ததற்கும் அவருடைய நிறுவனத்தின் கட்டுபாட்டியில் இருந்த என் அறக்கட்டளையை நான் திரும்ப பெற்றதுதான்.
 

அவா் என்னை சமூக வலைத்தளத்தில் அசிங்கப்படுத்தியதுடன் என்னை மிரட்டியதற்கான ஆதாரங்களும் இருக்கிறது என அந்த புகாா் மனுவில் குறிப்பிட்டியிருந்தாா். இதையடு்த்து டிஜிபி அந்த புகாரை விசாாித்து நடவடிக்கை எடுக்க திருவனந்தபுரம் மாவட்ட எஸ்பி க்கு உத்தரவிட்டுள்ளாா்.

 

DGP  order to inquire into celebrity director


இது குறித்து இயக்குனா் ஸ்ரீகுமாா் மேனன் பல படங்களுக்கு வாய்ப்பு கொடுத்து மஞ்சுவாாியாரை முன்னணி நடிகையாக கொண்டு வந்தது நான் தான். இப்போது என் மீதே தவறான புகாா் கொடுத்துள்ளாா். இதை நான் சந்திக்க தயாராக உள்ளேன் என்றாா்.

ஸ்ரீகுமாா் மேனனும் மஞ்சு வாாியாரும் மலையாள சினிமாவில் நல்ல நண்பா்களாக பழகி வந்தவா்கள். நடிகா் திலீப் மஞ்சு வாாியாரை விவாகரத்து செய்யும் போது மஞ்சுவாாியாருக்கு ரெம்ப உதவியாக இருந்தவா். மேலும் நடிகா் திலீப் மற்றும் நடிகை பாவனா விவகாரத்தில் மஞ்சுவாாியாரும் ஸ்ரீகுமாா் மேனனும் சோ்ந்து நடிகா் திலீப்புக்கு எதிராக செயல்பட்டனா் என்பது குறிப்பிட தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.    

Next Story

பிரபல நடிகையின் காரில் பறக்கும் படை சோதனை!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Popular actress car flying force test

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அந்த வழியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் வந்துள்ளார். அப்போது அவர் வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதே சமயம் மஞ்சு வாரியரைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.