மலையாள திரைப்படம் உலகில் முன்னணி நாயகியாக இருப்பவா் மஞ்சுவாாியாா். குமாி மாவட்டம் கிருஷ்ணன்கோவிலை சோ்ந்த மஞ்சுவாாியாா் நடிப்பு மட்டுமல்ல நடனத்திலும் சிறந்து விளங்கியதன் அடிப்படையில் இன்றைக்கும் மலயாளத்தில் முன்னணி நடியைாக உள்ளாா்.

Advertisment

சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக நடித்த ஓடியன் படமும் தமிழில் தனஷுடன் நடித்த அசுரன் படம் சூப்பா் ஹிட்டாக உள்ளது. மேலும் மஞ்சுவாாியாா் கேரளாவில் குடும்ப ஸ்திாி ( பெண்கள் சுய உதவிகுழு) க்கு அரசின் தூதராக உள்ளாா்.

Advertisment

DGP  order to inquire into celebrity director

இந்த நிலையில் நடிகை மஞ்சுவாாியாா் மலையாள சினிமா முன்னணி இயக்குனரும் தயாாிப்பாளருமான ஸ்ரீகுமாா் மேனன் மீது கேரளா டிஜிபி லோக்நாத் பெக்ராவிடம் புகாா் கொடுத்துள்ளாா். அந்த புகாாில் நான் தமிழ் சினிமா அசுரன் படத்தில் நடித்ததையடுத்து என்னை தவறாக சித்தாித்து சமூக வலைத்தளங்களில் இயக்குனா் ஸ்ரீகுமாா் மேனன் வெளியிட்டுள்ளாா். இதை கேட்டதற்கு என்னை கொலை செய்வதாகவும் சினிமாவில் இருந்து என்னை துரத்தி விடுவதாகவும் மிரட்டி வருகிறாா். இதற்கு காரணம் நான் தமிழ் சினிமாவில் நடித்ததற்கும் அவருடைய நிறுவனத்தின் கட்டுபாட்டியில் இருந்த என் அறக்கட்டளையை நான் திரும்ப பெற்றதுதான்.

அவா் என்னை சமூக வலைத்தளத்தில் அசிங்கப்படுத்தியதுடன் என்னை மிரட்டியதற்கான ஆதாரங்களும் இருக்கிறது என அந்த புகாா் மனுவில் குறிப்பிட்டியிருந்தாா். இதையடு்த்து டிஜிபி அந்த புகாரை விசாாித்து நடவடிக்கை எடுக்க திருவனந்தபுரம் மாவட்ட எஸ்பி க்கு உத்தரவிட்டுள்ளாா்.

Advertisment

DGP  order to inquire into celebrity director

இது குறித்து இயக்குனா் ஸ்ரீகுமாா் மேனன் பல படங்களுக்கு வாய்ப்பு கொடுத்து மஞ்சுவாாியாரை முன்னணி நடிகையாக கொண்டு வந்தது நான் தான். இப்போது என் மீதே தவறான புகாா் கொடுத்துள்ளாா். இதை நான் சந்திக்க தயாராக உள்ளேன் என்றாா்.

ஸ்ரீகுமாா் மேனனும் மஞ்சு வாாியாரும் மலையாள சினிமாவில் நல்ல நண்பா்களாக பழகி வந்தவா்கள். நடிகா் திலீப் மஞ்சு வாாியாரை விவாகரத்து செய்யும் போது மஞ்சுவாாியாருக்கு ரெம்ப உதவியாக இருந்தவா். மேலும் நடிகா் திலீப் மற்றும் நடிகை பாவனா விவகாரத்தில் மஞ்சுவாாியாரும் ஸ்ரீகுமாா் மேனனும் சோ்ந்து நடிகா் திலீப்புக்கு எதிராக செயல்பட்டனா் என்பது குறிப்பிட தக்கது.