Skip to main content

தண்ணீர் வராத குழாய்; மூடியே கிடக்கும் கழிப்பறைகள் - அவதிக்குள்ளாகும் பக்தர்கள்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

Devotees going to Thiruvannamalai Girivalam suffer without water

 

நேற்று மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கும் விடியற்காலை முதலே பக்தர்கள் கூட்டம் வந்தபடியே இருந்தது. மலை உச்சியில் எரிந்து வரும் அண்ணாமலையார் கோவில் மகாதீபத்தின் கடைசி தினம் நேற்று என்பதால் கூடுதலாகவே பக்தர்கள் வந்தனர். தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டு இருக்கின்றனர். தற்பொழுதெல்லாம் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலுமே தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் இருந்து பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். 

 

Devotees going to Thiruvannamalai Girivalam suffer without water

 

கிரிவலப் பாதை என்பது 14.5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த கிரிவலப் பாதையில் உள்ள கழிவறை, இலவச பக்தர்கள் ஓய்வு அறை, குடிநீர் டேங்க்குகளை திருவண்ணாமலை நகராட்சி, அத்தியந்தல் ஊராட்சி, அடி அண்ணாமலை ஊராட்சி, வேங்கிக்கால் ஊராட்சி போன்றவை நிர்வகித்து வருகின்றன. இந்த கழிவறைகள் பௌர்ணமி அன்று மட்டும்தான் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை. இதனால் கிரிவலம் வரும் பக்தர்கள் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆண்கள் சாலை ஓரங்களிலேயே மறைவான பகுதியில் சிறுநீர் கழித்துவிடுகின்றனர். பெண்களின் நிலைதான் மிகவும் மோசமாக இருக்கிறது என்கின்றனர் பக்தர்கள். 

 

அதேபோல் கிரிவலப்பாதையில் குடிநீருக்கு என நெடுஞ்சாலைத்துறையும் அங்குள்ள ஊராட்சிகளும் குடிநீர் டேங்க் வைத்து பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கி வருகின்றன. இந்தக் குழாய்களிலும் பெளர்ணமி அன்று மட்டுமே தண்ணீர் வருகின்றன. மற்ற நாட்களில் தண்ணீர் வராமல் அந்த குழாய்களில் வெறும் காற்று மட்டுமே வருகிறது. தண்ணீரின்றி பக்தர்கள் பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர். இரண்டு இடங்களில் மட்டும் தன்னார்வல அமைப்புகள் இலவச கேன் தண்ணீரை வழங்குகின்றனர். மார்கழி மாதப் பிறப்பு என்பதால் கிரிவலப்பாதையில் 4 இடங்களில் அன்னதானம் செய்துகொண்டு இருந்தார்கள். அதை வாங்கிச் சாப்பிட்ட மக்கள் குடிக்கவும், கை கழுவவும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டதைக் காணமுடிந்தது. 

 

Devotees going to Thiruvannamalai Girivalam suffer without water

 

14.5 கிலோமீட்டர் தூரத்தில் சில இடங்களில் மட்டுமே தண்ணீர் வருகின்றன. கழிவறைகளை மூடியே வைத்துள்ளனர். கொஞ்ச நேரம் உட்காரலாம் என்றால் பெஞ்ச்களில் சாமியார்கள் படுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினசரி இல்லையென்றாலும் முக்கிய தினங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கவும் கழிப்பறை, ஓய்வறைகளை திறந்து வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். 

 

- படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.