Demonstration demanding the arrest of the perpetrators on the administrator of the Veeramutharaiyar Progressive Union!

நேற்று (15.12.2020) வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சந்தர் மீது கொலை முயற்சி நடைபெற்றது.இதில்அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும், முத்தரையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் தமிழ்நாடு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில், திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் தளவாய் ராஜேஷ், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல், மாநிலத் துணைத் தலைவர் சம்பத், மத்திய மண்டலப் பொறுப்பாளர் குணா, திருச்சி வடக்கு மாவட்ட அமைப்பாளர் ரவி, மாநிலச்செய்தித்தொடர்பாளர் ராஜா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisment