Skip to main content

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வைத்த கோரிக்கை... ஆட்சிக்கு வந்ததும் உடனடி நடவடிக்கை!!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021

 

Demand made three years ago ... Immediate action after coming to power

 

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், வேலாயுதம்பாளையத்தில் ஏழ்மை நிலையில் வசிக்கும் செல்வராஜ் என்ற பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணையினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் முன்னிலை வகித்தார். அதன்பின் பத்திரிகையாளரிடம் பேசிய உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்திவருகிறார்.

 

அந்த வகையில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் வீடு இல்லாத, ஏழ்மை நிலையில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுவருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேடசந்தூர் வட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிக்கு, ஒரு நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது, செல்வராஜ் என்பவர் தனது இரு பெண் குழந்தைகளுடன் தகரத்தால் அமைக்கப்பட்ட கூடாரத்தில் ஏழ்மையில் வசித்து வருவதைக் காண முடிந்தது. தமிழ்நாடு அரசு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டித் தருமாறு கோரிக்கை மனு அளித்தார்.

 

கடந்த ஆட்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த காரணத்தால், அவரது கோரிக்கையை நிறைவேற்ற இயலவில்லை. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் கோரிக்கையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கும், வீடு கட்டுவதற்கு அரசின் திட்டத்தின்கீழ் ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். மாவட்ட ஆட்சித்தலைவரும் உடனடியாக இம்மனு மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் அரசின் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் செயல்படும் அரசு ஏழை, எளிய மக்களுக்காகச் செயல்படுகிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும். இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாமல் ஏழ்மையில் வாழும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக முழு முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்ட கலெக்டர் விசாகன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், கூடுதல் ஆட்சியர் தினேஷ் குமார், பழனி வருவாய் கோட்டாட்சியர் ஆனந்தி உள்பட அதிகாரிகள் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.