Deer issue forest officers fined

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் வடக்கு சரக பகுதியில் வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனத்துறையினர்கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஏரிமலை காப்புக்காடு பகுதியில் வலையுடன் சுற்றிக் கொண்டிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த மாது (53) என்பதும், மான் வேட்டைக்காக வனத்திற்குள் நுழைந்து இருப்பதும் தெரிய வந்தது.

Advertisment

இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்தனர். வனத்திற்குள் தடையை மீறி நுழைந்ததாக அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.