Skip to main content

மயக்க ஊசி செலுத்தி 12 வயது சிறுமியை சீரழித்த 17 பேர்! சென்னையில் அதிர்ச்சி!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
rafe

 

சென்னையில் 12 வயது சிறுமியை 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

சென்னை அயனாவரத்தில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.   இதில் கடந்த 30 வருடங்களாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் வசித்து வருகிறார்.   இவருக்கு இரண்டு மகள்கள்.  ஒரு மகள் வெளிமாநிலத்தில் தங்கி படித்து வருகிறார்.  இரண்டாவது மகள் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு 12 வயது. 

 

  இந்த கு்டியிருப்பில் வசிக்கும் 8 லிப்ட் ஆபரேட்டர்கள் மற்றும் 6 காவலாளிகள், எலக்ட்ரீசியன்கள், தண்ணீர் கேன் விநியோகம் செய்பவர்கள் என்று மொத்தம் 17 பேரும் கத்திமுனையில் மிரட்டியும், போதை மருந்து செலுத்தியும் கடந்த 5 மாதங்களாக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.  மிரட்டலுக்கு பயந்து இதை வெளியே சொல்லாமல் 5 மாதங்களாக அந்த சிறுமியும் மறைத்து வைத்துள்ளார்.  

 

இந்நிலையில், சிறுமியின் சகோதரி படிப்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது  தனக்கு நேர்ந்த துயரத்தை சொல்லி அழுதிருக்கிறார்.  இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பரிசோதனை செய்துள்ளனர்.  பரிசோதனையில் சிறுமி சொன்னது உறுதியானது.  இதையடுத்து அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் 17 பேர் மீது புகார் கூறப்பட்டது.  இந்த புகாரின் பேரில் 17 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   சிறுமியை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

 

12 வயது சிறுமியை 17 பலாத்காரம் செய்துள்ள செயல் சென்னையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்