Skip to main content

கணவனின் தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மருமகள்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

Daughter in law arrested in Mother in law case

 

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சிந்தாமணி(65). இவரது இளைய மகன் வேல்முருகன்(37). இவருக்கும் இவரது சகோதரியின் மகள் சங்கீதா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.  இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா, தனியாக வசித்து வந்தார். 

 

இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு வேல்முருகன் தனது உறவினர்கள் சிலரை அழைத்துச் சென்று சங்கீதாவிடம் சமாதானம் பேசி தன்னுடன் வாழ்வதற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதன் பிற்கு சங்கீதா வீட்டில் அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை சங்கீதாவின் பாட்டியும் வேல்முருகனின் தாயாருமான சிந்தாமணி கண்டித்து வந்துள்ளார். இதனால் மாமியார் மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தனக்கும் கணவர் வேல்முருகனுக்கும் இடையே மாமியார் சிந்தாமணியால் சண்டை வருகிறது என அவர் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். 

 

நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி வீட்டுக்குள் சென்று டீ சாப்பிடுவதற்காக பால் பாக்கெட் எடுத்துள்ளார். அப்போது சங்கீதா ஏற்கனவே தயார் நிலையில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாமியார் சிந்தாமணி மீது ஊற்றி தீ வைத்து விட்டு கதவை வெளிப்பக்கம் பூட்டி விட்டார். சிந்தாமணி போட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர். அங்கே சிந்தாமணி உடலில் தீப்பற்றிய நிலையில் துடித்துள்ளார். உடனடியாக தீயை அனைத்து சிந்தாமணியை தீக்காயங்களுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையல் சிந்தாமணி சிதம்பரம் மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் மருமகள் சங்கீதா தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக வழக்குப் பதிவு செய்த சேத்தியாத்தோப்பு போலீசார் சங்கீதாவை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.