Skip to main content

சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்கள்... தலைமறைவானவர்களைத் தேடும் காவல்துறையினர்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

Damaged maize crops ... Police search for missing persons

 

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ளது தச்சூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன்(85). இவர் தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். நேற்று காலை மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்காகத் தகுந்த ஏற்பாடுகள் செய்வதற்காக நிலத்திற்குச் சென்றார். அவர்கள் நிலத்தில் விளைந்திருந்த மக்காச் சோளப் பயிர்கள் சேதம் அடைந்து கிடந்தது. விளைந்த பயிர்களை யாரோ டிராக்டர் மூலம் உழுது நாசம் செய்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வரதராஜன் ராமநத்தம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்தனர். மக்காச்சோளம் விளையும்போது வரதராஜனின் தம்பி, வரதராஜனிடம் நிலத்தில் பங்கு கேட்டு தகராறு செய்துள்ளார். இது சம்பந்தமாக ராமநத்தம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு போலீஸார் தர்மாவை அழைத்துக் கண்டித்து அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அந்த முன்விரோதம் காரணமாகத் தர்மா அவரது மனைவி அருந்தவம் இவர்களது மகன் அசோக் ஆகிய மூவரும் ஒரு டிராக்டர் மூலம் வரதராஜன் பயிர் செய்திருந்த சோளத்தை உழுது அழித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தர்மா மகன் அசோக்கை கைது செய்துள்ளனர். தர்மா அவரது மனைவி அருந்தவும் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.