Skip to main content

ஆன்லைன் மோசடியில் பெண் பறிகொடுத்த பணம் மீட்பு

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

cyber crime Police recovered money stolen woman online fraud

 

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(26). படித்த பட்டதாரியான இவர் இணையதளத்தில் வேலை தேடி உள்ளார். அதில் வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து ஒரு இணையதளத்தில் பதிவும் செய்துள்ளார். அஞ்சுவின் இணையதள முகவரியை தொடர்பு கொண்டவர்கள், கடந்த மே மாதம் 5ஆம் தேதி அவர் செல்போனுக்கு பேசியுள்ளனர். அப்போது அஞ்சுவிற்கு வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளம் வழங்கப்பட்டுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து அவர்கள் கூறியபடி அதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்காக முன்பணமாக பல்வேறு தவணைகளில் ரூ. 2 லட்சத்தை கூகுள் பே மூலம் அஞ்சுவிடமிருந்து பெற்றுள்ளனர். ஆனால் இவர் வேலை செய்வதற்கான சம்பளம் தரப்படவில்லை. இவர் முன்பணமாக கட்டிய ரூ. 2 லட்சம் பணத்தையும் திருப்பி தரவில்லை.

 

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஞ்சு,  விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இவரது புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இணைய விசாரணை மூலம் அஞ்சு பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து, அதிலிருந்து  ரூ.2 லட்சம் பணத்தை மீட்டனர். பின்னர் அந்தப் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் க்ரைம் பிரிவு போலீசார் அஞ்சுவை நேரில் அலுவலகத்திற்கு வரவழைத்து அவரது பணத்தை  அவரிடம் ஒப்படைத்தனர். மோசடியில் பறிகொடுத்த பணத்தை கடும் முயற்சி செய்து மீட்டுக் கொடுத்த சைபர் க்ரைம் பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.