Skip to main content

பெண்ணுக்காகப் போதையில் கொலை செய்த நண்பன் தப்பியோட்டம்! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

CUDDLore district youth incident police investigation


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், நேற்று (10/10/2021) நள்ளிரவு அவசர ஊர்தியின் மூலம், 25 வயதுமிக்க அருண்ராஜ் என்பவர் ரத்த வெள்ளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த  மருத்துவர்கள் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டதைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டபோது சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 108 அவசர ஊர்திக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தது யார் என்றும், எந்த இடத்தில் இருந்து அழைத்துவரப்பட்டார் என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கினர். விசாரணையில்,  விருத்தாச்சலம் அண்ணா நகர் பகுதியிலிருந்து 108 அவசர ஊர்திக்கு விபத்து ஏற்பட்டதாகக் கூறி அழைப்பு வந்தது தெரியவந்தது. அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் வழிநெடுக ரத்தம் சிதறிக் கிடப்பதும்,  ரத்தம் படிந்த சட்டை கிடைப்பதையும் கண்டறிந்தனர். 

 

மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளை சோதனையிட்டபோது திரு.வி.க. நகரைச் சேர்ந்த நபிஸ் என்பவர் தனது மனைவியுடன் வசித்துவந்த வாடகை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்பு 108 அவசர ஊர்திக்கு தொலைபேசி மூலம் அழைத்த விடுத்த நபர் யார் என்றும் நபிஸின் நட்பு வட்டாரங்கள் யாரெல்லாம் என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது கத்திக்குத்தில் இறந்த இளைஞர், நபிஸின் நண்பர் அருண்ராஜ் என்பது தெரியவந்தது. 

 

மேலும் இது தொடர்பான விசாரணையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ஆரோக்கியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருண்ராஜ், விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்த கலை, வி.என்.ஆர் நகரைச் சேர்ந்த மனோஜ், திரு.வி.க நகரைச் சேர்ந்த நபிஸ், வடலூரைச் சேர்ந்த அப்பு என்கிற பிரேம் ஆகிய 5 இளைஞர்களும்  நண்பர்களாக இருந்துவந்துள்ளனர்.

 

இந்நிலையில், நேற்றிரவு (10/10/2021) அருண்ராஜை தொலைபேசி மூலமாக விருத்தாச்சலத்திற்கு வரவழைத்துள்ளனர். பின்னர் அனைவரும்  ஒன்றாக நபிஸின் வீட்டில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, பெண் தொடர்பான  பிரச்சினையில் அப்பு என்கிற பிரேம், தனது நன்பனான அருண்ராஜை கத்தியால் குத்தியுள்ளார்.  இதனைப் பார்த்த சக நண்பர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த  அருண்ராஜ்க்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாக கூறி 108 அவசர ஊர்தியை வரவழைத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது தெரியவந்தது. 

 

அதையடுத்து அப்பு (எ) பிரேம், மனோஜ், கலை ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர். முக்கிய குற்றவாளி நபிஸ் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். 

 

மது போதையில் சக நண்பனை கொலை செய்து, 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.