Skip to main content

''நிலத்தடிநீரை காக்கும் குளங்கள் சீரழிந்து வருகிறது...''- தூர்வாறி சீரமைக்க பொதுமக்கள் மனு!!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த 11 கிமீ தூரத்தில் மதுராந்தகநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் சோழர்கால ஆட்சியில் மதுராந்தகசோழர் தில்லை நடராஜர் வணங்குவதற்கு வரும்போது தங்கியுள்ளதால் இந்த ஊரை அவரது பெயரை கொண்டு அழைப்பட்டு வருவதாக அவ்வூரில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இந்த ஊரின் நிலத்தடி மற்றும் குடிநீர் ஆதாரத்தை காக்கும் வகையில் திருக்குளம், ஆழங்காத்தா குளம், மொளலிகுளம் உள்ளிட்ட மூன்று குளங்கள் உள்ளது. இந்த குளங்கள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து குளங்கள் முழுவதும் ஆகய தாமரை செடிகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு அவதி அடைந்து வருவதாக கூறுகிறார்கள்.

 

Groundwater protection ponds are deteriorating

 

இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமச்சாரி என்பவர், மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வனுக்குக்கு மனு அனுப்பியுள்ளதாக கூறிய அவர், இந்த ஊரில் உள்ள குளங்களில் டாஸ்மாக் மதுபாட்டில், கப், தண்ணீ பாட்டில் ஆகாய தாமரை செடிகள் என அசுத்தமாக உள்ளது. இந்த குளங்களில் கோடையில் கால்நடைகள் தண்ணீர் குடிக்க, பொதுமக்கள் குளிக்க என அனைத்து மக்களின் பயன்பாட்டுக்கும் உதவியாக இருக்கும். இப்படியுள்ள குளத்தில் தற்போது கால் வைக்கவே பயமாக உள்ளது. கதண்டு என்ற விச வண்டுகள் மற்றும் அதைவிட கொடுமையாக மதுபான பாட்டிலை குடித்துவிட்டு உடைத்து போடுகிறார்கள்.

 

Groundwater protection ponds are deteriorating

 

குளத்தில் கால் வைக்கவே பயமாக உள்ளது. நிலத்தடி நீர் கொஞ்சம் உப்பாக மாறியுள்ளதால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் அமைக்கப்பட்டது. அமைக்கபட்டதோடு அது அப்படியே கிடக்கிறது. எனவே  மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தனச்செல்வி என்ற பெண் கூறுகையில், ஊரில் கழிப்பிடத்திற்கு செல்ல இடமில்லை. தற்போது அனைத்து வயல்களிலும் மகசூல் போட்டாச்சு இதனால் ஊரில் உள்ள மக்கள் ஆண், பெண் என அனைவரும் சாலையின் இரு புறமும் இருட்டு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்கிறார்கள். இதனால் நோய் பரவும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரசு உனடியாக தலையீட்டு இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.