Skip to main content

பண்ருட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டம்.

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 60- க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்திட, மலற்றாற்றிணை தூர்வார ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி உடனே பணியை துவக்கவேண்டும்.  விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகில் தடுப்பணை மட்டும் ஷட்டர் அமைத்து தண்ணீரை திருப்பி விட வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பை அகற்றி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை மலற்றாற்றில்  திருப்பி விடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டை நாமம் போட்டுக்கொண்டு விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதிகள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

 

cuddalore panruti farmers strike based on rain water harvesting lake cleaning


இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் காந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை, முன்னாள் விவசாய சங்க ஒன்றிய செயலாளர்கள் லோகநாதன், தென்னரசு உள்ளிட்டோர் கலந்து விவசாயிகளின் கோரிக்கை குறித்து கண்டன உரையாற்றினார்கள். பின்னர் மேற்கொண்ட கோரிக்கைகள் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.