Skip to main content

மலேசியாவில் மகன், மருமகள், பேத்தி உயிரிழப்பு- அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை!

Published on 25/07/2021 | Edited on 25/07/2021

 

 

CUDDALORE DISTRUCT FAMILY INCIDENT IN MALASIYA GOVERNMENT


கடலூர் மாவட்டம், திட்டக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரதாபன் சிங் என்பவரின் மகன் ரவிராஜா (வயது 40). மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கும், சத்யா (வயது 39) என்பவருக்கும், கடந்த 2011- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  

 

இன்ஜினியர்களான கணவன், மனைவி இருவரும் மலேசியாவில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு குகதாராணி என்ற 5 வயது மகள் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் பகுதியில் டாமன் தோனகா செலத்தானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று ரவிராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஜூலை 16- ஆம் தேதி மனைவி சத்யா, மகள் குகதாராணக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.  

 

இந்நிலையில், ஜூலை 16- ஆம் தேதி சத்யாவின் உடல் நிலை மோசமானது. இதனால் தாய், மகள் இருவரையும் பார்த்துக் கொள்ளவும், உதவி செய்யவும், ஆள் இல்லாததால் சத்தியா மன அழுத்தத்தில் இருந்த நிலையில் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தனது கணவருக்கு செல்ஃபோனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, ஜூலை 16- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணியளவில் தான் வசித்து வந்த 18 ஆவது மாடியிலிருந்து ஐந்து வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

 

இந்த தகவல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவி ராஜாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவும் சிகிச்சை பலனின்றி நேற்று (24/07/2021) மாலை மலேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பணிக்கு சென்ற மகன், மருமகள், பேரக்குழந்தை வீடு திரும்பாத நிலையில் சடலத்தை கொண்டு வர முடியாத நிலையிலும் அவர்களின் அஸ்தியையாவது கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது பெற்றோர், உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.