Skip to main content

மது பாட்டிலுக்காக விவசாயி கொலை! கோவில் பூசாரி பரபரப்பு வாக்குமூலம்! 

Published on 13/09/2020 | Edited on 13/09/2020

 

cuddalore district panruti farmer incident police investigation

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நடுமேட்டுக்குப்பத்திலுள்ள முந்திரி தோப்பின் நடுவே அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஊரணி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஒரு சிலருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கோயிலுக்கு அழைத்து வந்து பூஜை செய்தால் உடல்நிலை சரியாகி விடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

 

இந்நிலையில் கடந்த (09/09/2020) அன்று கோயிலில் படையல் வைக்க ஒரு பிரிவினர் கோயிலுக்கு சென்றிருந்தனர். அப்போது கோயில் முன் மர்மநபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவர் குறித்து விசாரணை செய்தனர். அவர் நடுமேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. 43 வயதாகும் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், விஜயகுமார், விஜயபாரதி என்ற 2 மகன்களும், பிரதீபா என்ற ஒரு மகளும் உள்ளனர். ஜெயந்தி சாலை விபத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அதனால் மனமுடைந்த ரவி மதுவுக்கு அடிமையாகி, சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

 

இந்த நிலையில்தான் முந்திரி தோப்பிலுள்ள நொண்டி வீரன் கோவிலில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததால் அவரை யாராவது அடித்துக் கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிணத்தை கைப்பற்றிய காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் சிவகுரு (24), கோவில் பூசாரி வைரமணி (64) ஆகியோரை கைது செய்தனர்.

 

கைதான கோவில் பூசாரி வைரமணி போலிசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:, "வேண்டுதலுக்காகவும், நேர்த்தி கடனுக்காகவும், அய்யனார் சாமிக்கு மதுபாட்டில்களை வைத்து பக்தர்கள் படைப்பது வழக்கம்.படைத்த மது பாட்டிலை ரவி கேட்டார். ரவிக்கு தராமல் அதே ஊரை சேர்ந்த சிவகுருவுக்கு கொடுத்ததால் தகாத வார்த்தையால் ரவி திட்டினர். இதனால் ஆத்திரமடைந்த நானும் சிவகுருவும் சேர்ந்து ரவியை தாக்கினோம்.

 

சிவகுரு தடி மற்றும் குத்து விளக்கினால் தாக்கினார். நான் கோவில் மணியால் ரவி தலையில் அடித்தேன். ரவி மயங்கி விழுந்தான். நாங்கள் போலீசுக்கு பயந்து தப்பிஓடி நடுமேட்டுகுப்பம் சின்னகாட்டுப்பாளையம் வெள்ளவாரி ஓடை அருகில் உள்ள வீரன் கோவில் அருகில் பதுங்கி இருந்த போது எங்களை போலீசார் கைது செய்தனர்" என  அவர் கூறியுள்ளார்.

 

ஏற்கனவே சாலை விபத்தில் தாயை இழந்த மூன்று பிள்ளைகளும்,  தற்போது மதுவுக்கு அடிமையான தந்தை கொல்லப்பட்டதால் பெற்றோர் இன்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 

மது கேட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.