Skip to main content

குழந்தை உயிரிழந்த வழக்கு; போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிய கும்பல்

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

cuddalore district neyveli five years child incident 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த தொப்புளிகுப்பம் கிராமத்தில் கமலம், அவரது மகள் அஞ்சலை மற்றும் மகன் அருள்முருகன் ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கமலத்தின் வீட்டில் வேலை செய்த உக்காண்டி-ராஜேஸ்வரி தம்பதியின் இரண்டாவது மகளான 5 வயது பெண் குழந்தை, முதனை கிராமத்தின் அருகே உள்ள முந்திரிக்காட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கமலம், அஞ்சலை மற்றும் அருள்முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு கிராமத்தை சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் தொப்புளிகுப்பத்தில் உள்ள கமலம் மற்றும் அவரது மகள் அஞ்சலையை கொலை செய்வதற்காக இன்று அதிகாலை வந்துள்ளனர். இதுகுறித்து முன்னதாகவே தெரிந்து கொண்ட கமலம் மற்றும் அவரது மகள் அஞ்சலை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததால் எஸ்.ஐ. அழகிரி தலைமையிலான கிரைம் போலீசார் கமலம் வீட்டில் பதுங்கி இருந்தனர்.

 

அப்போது கமலத்தின் வீட்டிற்குள் புகுந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் கமலம் மற்றும் அவரது மகள் அஞ்சலையை மிரட்டிய போது, மறைந்திருந்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது திடீரென பிரகாஷ் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை பார்த்து  சுட்டுவிடுவதாகக் கூறி, சினிமா பட பாணியில்  துப்பாக்கி முனையில் காவல்துறையினரை மிரட்டிவிட்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில், துப்பாக்கி முனையில் போலீசாரை மிரட்டி தப்பித்த குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அஞ்சலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அந்த புகாரில், தங்களது வீட்டில் வேலை செய்த தம்பதியினரின் குழந்தை மீனா கீழே தவறி விழுந்து உயிரிழந்தது. அவ்வழக்குக்கான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மீனாவின் பெற்றோர் சாட்சியம் அளித்துவிட்டனர். சாட்சி சொன்ன உக்காண்டி- ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கடந்த இரண்டு வருடங்களாக மேலக்குப்பத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி சுந்தரி என்பவரும், சுந்தரி உடன் திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் ரவிபிரகாஷ் என்பவரும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு 10 லட்ச ரூபாய் பணம், மூணு சென்ட் நிலம் தரம் வேண்டுமெனவும், அவ்வாறு தரவில்லை என்றால், மறுபடியும் சாட்சிகளை மாற்றி சொல்ல வைப்போம் எனவும், ஜாமீனை ரத்து செய்து விடுவோம் எனவும் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவ்வாறு பணம் தர மறுத்ததால் இன்று தங்களது வீட்டிற்குள்  புகுந்து துப்பாக்கியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினரை துப்பாக்கியை காட்டி மிரட்டி குற்றவாளிகள் தப்பித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.