Skip to main content

திருட்டில் இது புது விதம்; அதிர்ச்சியில் பொதுமக்கள்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

Cuddalore different theft

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனேசன்(27). இவர் வருவாய்த் துறையில் கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிவனேசன் மற்றும் அவரது மனைவி சங்கீதா அவர்களது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டின் உள்ளே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். சிவனேசன் தந்தை சண்முகம் மற்றும் தாய் ஆதிலட்சுமி ஆகிய இருவரும் அந்த வீட்டின் வெளிப்பகுதியில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவின் தாழ்ப்பாளை சத்தம் இல்லாமல் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 4 சவரன் நகை, 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

 

அதிகாலை சுமார் 3 மணி அளவில் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த சண்முகம் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அலங்கோலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தன் மகன் மற்றும் மருமகளை எழுப்பி பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அதோடு திருட வந்த கொள்ளையர்கள், சிவனேசன் வீட்டில் தீபாவளியை முன்னிட்டு குடும்பத்தினர் சாப்பிடுவதற்காக செய்து வைக்கப்பட்டிருந்த பலகாரங்களையும், வீட்டில் இருந்த ஒரு குடம் தண்ணீரையும் வீட்டுக்கு வெளியே கொண்டு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு புளிய மரத்தின் அடியில் வைத்து சாவகாசமாக தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு தண்ணீரையும் குடித்துவிட்டு சென்றுள்ளனர்.

 

அதேபோல் சில தினங்களுக்கு முன்பு  ஆவினங்குடி அருகில் உள்ள மருதத்தூர் கிராமத்தில் ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில்  சமைத்து வைத்திருந்த கறிக் குழம்பில் சாதம் போட்டு வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை வீட்டுக்கு வெளியே வீசிச் சென்றுள்ளனர்.  தற்போதெல்லாம் கொள்ளையடிக்க வரும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் வீட்டில் ருசியான தின்பண்டங்கள் சாப்பாடு இருந்தால் சாப்பிட்டு விட்டு நகை, பணம் ஆகியவற்றை எடுத்துச் செல்கின்றனர்.

 

பொதுவாக காவல்துறையினர் திருட்டு வழக்குகளில் பூட்டு உடைப்பு, கதவு உடைப்பு ஆகியவற்றை வைத்தே இதில் எந்த கும்பல் ஈடுபட்டிருப்பார்கள் என்று யூகிப்பார்கள். அந்த வகையில் திருட வந்த இடத்தில் சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக திருடிவிட்டுச் சென்றது புதுவித கும்பலா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நூதனக் கொள்ளையர்கள் செய்யும் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.