குடி போதையில் ரயில் பயணிகளை ஆபாசமாகத் திட்டிய சி.ஆர்.பி.எப் வீரரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் போதையில் ரகளை செய்த சி.ஆர்.பி.எப் வீரர் தொடர்பாக பயணிகள் புகார் செய்ததை அடுத்து ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் அந்த ரயிலில் பயணித்துள்ளார். எஸ்-10 கோச்சில் பயணித்த அவர், உடன் பயணித்த பயணிகளை ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் அதிருப்தியான பயணிகள் அவரை வீடியோ எடுத்து ட்விட்டர் மூலம் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.