Skip to main content

மழை வெள்ளத்தால் நீரில் மூழ்கிய பயிர்கள்! கடலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!  

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்துவருகிறது. கடந்த 18ஆம் தேதி கடலூரில் 15 செ.மீ. மழை பொழிந்த நிலையில், தற்போது கடந்த மூன்று நாட்களாக அதிகபட்சமாக 17.3 செ.மீ. மழை பொழிந்துள்ளது. 

 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பொழிவது நின்றாலும் தொடர் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் மீளவில்லை. வயல்வெளிகள் மட்டுமல்லாது குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் வடியாததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதுடன், பல குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. 

 

கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புதுப்பாளையம், பாரதியார் நகர், முதுநகர், சீதாராம் நகர், வண்ணாரபாளையம்,  கோண்டூர், பாதிரிக்குப்பம், பச்சையாங்குப்பம், புதுப்பாளையம், குமளங்குளம், சேடப்பாளையம், பாதிரிக்குப்பம், சாவடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

 

இந்தத் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக 20,500 ஏக்கர் நெற்பயிர்கள், 2,700 ஏக்கர் உளுந்து, 100 ஏக்கர் மக்காச்சோளம், 1,800 ஏக்கர் பருத்தி மற்றும் தோட்டப் பயிர்களான மல்லிகை பூ ஆகியவை 5 ஆயிரம் ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.

 

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கடலூர் - புதுவை இணைக்கக் கூடிய கும்தாமேடு தரைப்பாலம் பெண்ணை ஆற்றில் முற்றிலுமாக மூழ்கி இரண்டு கரைகளிலும் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் ஓரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த பேருந்து பயணிகள் நிழற்குடை கீழே சாய்ந்த நிலையில் ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு நிழற்குடை இடித்து ஆற்றில் தள்ளப்பட்டது. 

 

விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் கிராமத்தின் இருபக்கமும் செல்லக்கூடிய ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஓடையைக் கடந்து வெள்ளம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வழியாக கரை புரண்டு கிராமத்தைச் சுற்றிலும் சூழ்ந்துள்ளது. இதனால் அம்மக்கள் கிராமத்தைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தனித் தீவாக மாறிப்போன இக்கிராம மக்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வெளியேற முடியாத சூழலில் உள்ளனர். இதேபோல் அருகிலுள்ள இளமங்கலம், ஆலிச்சிக்குடி, ஆலந்துறைப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.