Skip to main content

8 வழிச்சாலை... நம் கனிம வளங்களை அள்ளிச் செல்லும் ஜிண்டால் முதலாளிக்கானது..  எடப்பாடி அரசுக்கு பாலபாரதி எச்சரிக்கை..

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

போராடும் மக்களை கொன்றுகுவிக்கும் ஏதேச்சை அதிகாரத்தை கைவிடாவிட்டால் உங்களை நாங்கள் சும்மா விடமாட்டோம் என எடப்பாடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி.

 

balabarathi


 

‘போராடுவோம் தமிழகமே’ என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமையன்று நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியது,

மத்தியில் ஆளும் மோடி அரசும், அதன் ஊதுகுழலாகச் செயல்படும் மாநில எடப்பாடி அரசும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. அவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால்.. கார்பரேட் நிறுவனங்களுக்கு சேவகம் செய்யும் திட்டமாகவே இருக்கும். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட அனைத்தும் ஏழை, எளிய மக்களை காவு வாங்கி பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் திட்டமாகவே இருக்கிறது.

அந்த வகையில் தற்பொழுது சேலத்திலிருந்து சென்னை வரை 8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் என எடப்பாடியார் அடம்பிடிக்கிறார். சாதாரண மக்களின் போக்குவரத்து வசதிக்காகவா இதைச் செய்கிறார்? சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து இரும்பையும், பிளாட்டினத்தையும் எடுத்து ஜிண்டால் உள்ளிட்ட கார்பரேட் கம்பெனிக்கு தாரைவார்க்கத் துடிக்கிறார்கள். அவர்கள் இலகுவாக சென்னை துறைமுகத்திற்கு கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கே இந்த எட்டுவழிச்சாலை. இதற்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலைங்களையும், மக்களின் வாழ்விடங்களையும், மலைகளையும் அழிக்கத் துடிக்கிறார்கள். ஏற்கனவே, சேலத்திற்கு விமானச் சேவை அளிக்கப்பட்டதும் ஜின்டால் முதலாளி வந்து இறங்குவதற்குத்தானெ ஒழிய மக்களுக்கானது அல்ல.

 

balabarathi


 

 

 

போராடுகின்ற மக்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்கிறார்கள். யார் சமூக விரோதி? மணலைக் கடத்துபவன், மலைகளை வெட்டியெடுப்பவன், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவன், பொது வினியோகத் திட்டத்தை சீரழிப்பவன், அரசாங்க சொத்தை கொள்ளையடிப்பவன், மக்கள் வரிப்பணத்தை சுரண்டுபவன் இவர்கள் தானே உண்மையான சமூக விரோதி. மதுக்கடைகளுக்கு எதிராக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய ‘மக்கள் அதிகாரத்தை’  சேர்ந்த 6 பேர் மீது தேச விரோத வழங்கு போட்டுள்ள எடப்பாடி அரசுதான் சமூக விரோத அரசு.

 

 

கையில் கொடிகூட கொண்டு போகாமல் குழந்தைகள், பெண்களுடன் அமைதியாக பேரணி சென்ற தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வெகுதூரத்திலிருந்து அதிநவீன துப்பாக்கியுடன் குறிப்பிட்ட நபர்களை குறிபார்த்து சுடப்பட்டுள்ளனர். ஒருவர்கூட முழங்காலுக்கு கீழே சுடப்படவில்லை. நெஞ்சிலும், தலையிலும், வாயிலுமாக சுடப்பட்டுள்ளனர். எடப்பாடி அரசு ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால் விடுத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எதேச்சையதிகாரத்தை கைவிடாவிட்டால் உங்களை நாங்கள் சும்மா விடாமாட்டோம். போராடும் மக்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம். மத்தியில் பிஜேபி அரசையும், மாநிலத்தில் அதிமுக அரசையும் வீழ்த்துவதற்கு விரிவான களம் அமைப்போம். என்றார் பாலபாரதி..

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
The Governor has been imposed on TN Minister Palanivel Thiagarajan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஜாமீன் இல்லாமல் ஓராண்டாக சிறையில் உள்ளார். அதேபோல் டெல்லி அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். இந்த அரசு தொடர்ந்தால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவிடும். அதனால்தான் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். பேரிடரின்போது உதவி கேட்டால், மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பது போல் பா.ஜ.க.வைப் பற்றி மக்கள் எண்ணுகின்றனர். கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.