Skip to main content

"30 லட்ச ரூபாய் கார் வேணாம், மாட்டு வண்டிதான் வேணும்!" - மாஸ்டர் டிகிரி முடித்த மணமக்களின் 'மாட்டுவண்டி' பயணம்...!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

 Cow cart ride of educated brides ...!

 

வசதி படைத்தவர்களின் இல்லத் திருமணம் என்றாலே ஆடம்பரமாய், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு வாகனம் மேலும் பல வகை உணவு வகைகள் எனப் பல லட்சக்கணக்கில் செலவு செய்துதான் பெரும்பாலான திருமணங்களை நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் கூட வீடுகளில் திருமணம் நடைபெற்று பல ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இப்போது கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல திருமணங்கள், வீடுகளில் நடைபெற்று வருகிறது. அதிலும் திருமணம் என்றால் ஆடம்பரம் மட்டுமல்ல 'ஃபோட்டோ சூட்' என்ற பெயரில் நடிகர் நடிகை போல மணமக்களை போஸ் கொடுக்க வைப்பது, மணமேடையில் குத்தாட்டம் போடுவது என புதுமை என்ற பெயரில் மாற்றிவிட்டனர். 

 

 Cow cart ride of educated brides ...!

 

நாகரீகம் என்ற முறையில், பல புதுமைகளைக் கொண்டு வந்து திருமணச் சடங்கு என்ற பழமையை வேரோடு அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 27 -ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மணமகன் கௌதமன், மணமகள் சௌந்தர்யா ஆகியோர் திருமணத்தில் பழமையை நினைவு கூறும் விதமாகவும், பாரம்பரித்தை மீட்டெக்கும் முயற்சியாகவும், திருமண மண்டபத்திலிருந்து மணமகன் வீடு உள்ள வெள்ளாளபாளையம் என்ற கிராம் வரை, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர்.

 

விவசாயக் குடும்பங்களிலிருந்து வரும் புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டிப்பயணம் மேற்கொள்வது வழக்கமானது என்றாலும், இந்த மணமக்கள் இருவரும் முதுகலை பட்டயப்படிப்பு முடித்து நகரப் பகுதியில் வேலை பார்த்து நாகரீகத்துடன் வாழ்ந்துவருபவர்கள். அந்தக் காலத்தில் இவர்களது பெற்றோர்கள், திருமணத்தின் போது மாட்டு வண்டியை மட்டுமே போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வந்ததை அறிந்து, அவர்களது பிள்ளைகளான மணமக்களும் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு, பழைமையை வெளிப்படுத்தி சிறப்பு சேர்த்தனர். மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை வழியில் உள்ள கிராம மக்களும், நகர்ப் பகுதி மக்களும் வியப்புடன் பார்த்ததுடன், ஒரு சிலர் மணமக்கள் மாட்டுவண்டியை நிறுத்தி அவர்களோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

 

 Cow cart ride of educated brides ...!

 

மாட்டு வண்டிப்பயணம் மேற்கொண்ட தம்பதிகள் இதுகுறித்து கூறுகையில் "எங்களது இரு குடும்பங்களும் விவசாயம் சார்ந்த குடும்பங்கள் என்பதால், வரும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நினைவு கூறவேண்டும் என்ற  எண்ணத்திலும் நல்ல நோக்கம் கொண்ட சமுதாயத்தை உருவாக்கவும் இந்த மாட்டு வண்டிப்பயணம் மேற்கொண்டோம். எங்களின் திருமணத்தில் புது அனுபவம் ஏற்பட்டதை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது" என மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

 

இந்தத் திருணமத்தில் மணமகனுக்குப் பெண் வீட்டார் சீதனமாக ரூபாய் 30 லட்சம் மதிப்பில் புதிய சொகுசு கார் வழங்கியிருந்த நிலையிலும் மணமகள் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்ளவே விரும்பம் தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.