Skip to main content

48 மணி நேரம்தான்.. தனுஷிற்கு கெடு விதித்த நீதிமன்றம்...! 

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

The court ordered Dhanush to pay tax within 48 hours ...!

 

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி நிலுவைத்தொகை 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2018ல்  தீர்ப்பளித்த்து.

 

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்ப்பட்டதை அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி,   மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும்,  அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

 

அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறுக்கிட்டு, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், என்ன பணி அல்லது தொழிலில் இருக்கிறீர்கள் என குறிப்பிடாதது ஏன் என  கேள்வி எழுப்பினார்.

 

என்ன வேலை என்பதை ஏன் மறைத்தார் என மனுத்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, பணியையோ அல்லது தொழிலையோ வழக்கு மனுவில் குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா என கேள்வி எழுப்பினார்.


2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டிதானே எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து வழக்கறிஞர்தானே மனுதாரருக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

 

ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் அல்லது சோப்பு வாங்கும் பொதுமக்கள் போன்ற ஏழை நடுத்தர மக்கள் கூட வரி செலுத்திதானே பயன்படுத்துகிறார்கள் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பெட்ரோலில் ஜி.எஸ்.டி. கட்ட முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்தை நாடுகிறார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.


உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் என குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்துங்கள் என அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம்சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் படி நடக்கும்படி அறிவுறுத்தினார்.


நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவிற்காக  மதியம் தள்ளிவைத்தார்.


அதன்படி, வணிக வரித் துறை தரப்பில் தனுஷின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாய் செலுத்த வேண்டிய நிலுவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது தனுஷ் தரப்பில், கரோனா காலம் என்பதால் திங்கட்கிழமைக்குள் இந்த தொகையை செலுத்திவிடுவதாக உறுதி அளிக்கப்பட்டது.


ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மின்னணு பரிவர்த்தனையிலேயே நிலுவை வரியை செலுத்தபோவதால் 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை வாபஸ் பெறும் தனுஷின் கோரிக்கையை நிராகரித்து, வழக்கை முடித்து வைத்தார்.


பின்னர், நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் குவிந்துள்ள நிலையில், இதுபோன்ற தேவையற்ற வழக்குகள் மேலும் சுமைதான் என குறிப்பிட்டார். பின்னர், மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்யும்போது மனுவில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இல்லை என்றால் அதை ஏற்க கூடாது என்ற உயர் நீதிமன்ற விதிகளை பின்பற்றாத பதிவுத்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் தனுஷின் மகனுக்கு அபராதம் 

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

 Actor Dhanush's son fined

 

பிரபல நடிகர் தனுஷின் மகன் வாகன விதிகளை மீறியதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

 

பிரபல நடிகர் தனுஷின் மூத்த மகன் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாகப் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக நடிகர் தனுஷின் மகனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. தனுஷின் மூத்த மகன் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி பயணிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

தனுஷின் மூத்த மகன் 17 வயது சிறுவன் என்ற நிலையில், சிறுவனாக இருசக்கர வாகனத்தை இயக்கியதற்காகவும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

படப்பிடிப்பில் ஏற்பட்ட ரத்தக்காயம்; பதறிய தனுஷ் - சம்யுக்தா பகிரும் சுவாரசியம்

 

 Bleeding injury during filming; A nervous Dhanush-Samyukta sharing an interesting

 

நடிகர் தனுஷ் நடிப்பில் 'வாத்தி' படம் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கேரளத்து வரவு நடிகை சம்யுக்தா வாத்தி பட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்... 

 

இயக்குநர் கற்றுத் தருவதற்கு மேல் கேரக்டர் வடிவமைப்பில் நீங்களாக சேர்த்த விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?

'வாத்தி' பட மீனாட்சி கேரக்டர் ஒரு டீச்சர். பொறுப்பான ஒரு டீச்சராகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஜாலியாகவும் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இயக்குநர் எனக்கு மிகவும் உதவினார். இந்த கேரக்டரின் லுக் போன்ற விஷயங்களுக்காக எனக்கென்று ஒரு டீம் இருந்தது. முழுமையாக ஒரு டீச்சராக நான் தெரியவேண்டும் என்பதற்காக அந்த டீமோடு இணைந்து நானும் வேலை செய்தேன். 'வா வாத்தி' பாடல் வெளியான பிறகு பலர் இன்ஸ்டாகிராமில் அந்தப் பாடலை வைத்து ரீல்ஸ் செய்தனர். அதில் அந்தப் பாடலில் என்னுடைய லுக்கை அப்படியே பிரதிபலித்திருந்தனர். மக்களோடு கனெக்டாக வேண்டும் என்று நான் நினைத்தது நடந்தது. இதைத்தான் வெற்றியாக நான் கருதுகிறேன்.

 

தனுஷ் போன்ற சிறந்த நடிகரோடு நடிக்கும்போது ஆரம்பத்தில் பயம் இருந்ததா?

தனுஷ் ஒரே டேக்கில் சிறப்பாக நடிக்கக் கூடியவர். அதனால் ஒவ்வொரு சீனையும் முந்தைய நாளே கேட்டு வாங்கி நான் பாடம் செய்து கொள்வேன். முதல் ஷாட்டுக்கு முன்னால் ஒரு பயம் இருந்தது. இரண்டாம் பாதியில் உள்ள கடினமான ஒரு காட்சியுடன் தான் ஷூட்டிங் தொடங்கியது. கேட்டைத் திறந்து நான் உள்ளே செல்லும் காட்சி. நான் நடித்துக் கொண்டிருக்கும்போது தனுஷ் சார் 'கட் கட்' என்றார். கேட்டைத் திறக்கும்போது அதிலிருந்த ஊசி என்மேல் குத்தி ரத்தம் வழிந்தோடியது. அது தெரியாமல் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அவர் சொன்னவுடன் தான் எனக்கே தெரிந்தது. அதன் பிறகு மருத்துவரை அழைத்து சிகிச்சை கொடுத்தார்கள். தனுஷ் சாருடைய அன்பு அந்த நிகழ்வின் மூலம் தெரிந்தது.

 

செட்டில் தனுஷ் எப்படி இருப்பார்?

அவர் ரிகர்சல் செய்து நான் பார்த்ததே இல்லை. தன்னுடைய கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஷாட்டில் நாம் கொடுக்கும் ஆச்சரியங்களுக்கு ஈடுகொடுக்க அவர் எப்போதும் தயாராக இருப்பார். நமக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார்.